அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களை மீண்டும் அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக நிறுத்தி, அது தொடர்பான தனது கொள்கைகளை மீளவும் ஆராய்ந்து மாற்றுத் தீர்வொன்றை எட்டவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களை அரச ஆதரவில் ஏன் குடியேற்றுகிறீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். தெற்கில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெயர்ந்திருக்கும் எமது தமிழ் மக்களை அரச ஆதரவில் குடியேற்ற முடியுமா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கேள்வியெழுப்பியுள்ளார்.
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு இரகசிய கடிதம் ஒன்றை நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் அனுப்பி வைத்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி மாநாடு முடிந்ததும் அவரை சந்தித்து கலந்துரையாட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்திருந்தார்.
துபாயில் இருந்து விமானம் மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த ஈரான் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு 8.45 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜூன் 1ம் திகதியன்று, கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்திருக்கும், பாரதி விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள தமிழக அறிஞர்கள் தொடர்பில் திரு. வைகோ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
தம்புள்ளை முஸ்லிம் பள்ளி மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அது குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு இன்னும் குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவில்லை.
அரசாங்கத்தில் ஒரு அதிகாரியாக மாத்திரம் இருந்து கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அரசியல்வாதிகளைப் போன்று செயற்படுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நுவரெலியாவில் நல்லாயன் மகளீர் கல்லூரியில் அண்மைக்காலமாக தமிழ் மாணவிகள் கிறித்தவ மதத்தைச் ஆசிரியை ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாதகல்லில் கடற்றொழிலாளர்களுக்கு மீண்டும் “பாஸ்” அனுமதியை பெற்றுக்கொண்டே மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் என்று கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா நோக்கி மற்றுமொரு தொகுதி இலங்கைப் படகில் பயணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் நேற்று செவ்வாய்க்கிழமை கிறிஸ்மஸ் தீவில் இறக்கப்பட்டதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகில் போர் இடம்பெறும் பிராந்தியங்களில் வல்லுறவை யுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவது தொடர்பான ஆதாரத்தை திரட்டுவதற்கு துரிதமாக அந்தப் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பதற்கு தேவையான விசேட செயலணிப் பிரிவை பிரிட்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய அரசின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
பருவநிலை மாறுபாடுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, உலகம் வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தின் அடையாளங்கள் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதும் அதன் உரிமையாளரான பாலிவுட் நடிகர் ஷாருக்கானை கிரிக்கெட்டின் பாட்ஷா என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்க தொடங்கியுள்ளனர்.
ஏனைய சாதனங்களை விடவும் பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டவையாக iOS சாதனங்கள் காணப்படுகின்றன. அத்துடன் இவ்வகையான சாதனங்களில் மேலும் பல அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
குழந்தைகளின் உலகில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டாரான ஸ்பைடர் மேன் சார்ந்த கற்பனையில் எத்தனை படங்கள் வந்தாலும் அசராமல் குழந்தைகள் ஆதரிக்கிறார்கள். அதே நேரம் அது அவர்களைக் கவரும்படி இருக்க வேண்டும்.
வரி விடயங்களுக்குத் தலைமையகமாகத் திகழும் பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளுடன் செய்துள்ள ரூபிக் ஒப்பந்தம் குறித்து தனது சந்தேகத்தை எழுப்பியது.
சிரியாவில் நடைபெறும் கொடூரக் கொலைகளை நிறுத்துவதற்கு பிரான்சும், பிரிட்டனும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டேவும், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனும் தெரிவித்தனர்.
1990ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆனையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள்.