Switch to
முக்கிய செய்தி
(4ம் இணைப்பு)
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:45.22 PM ] []
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரதான செய்திகள்
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ 2010-02-08 16:33:42 ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ 2010-02-08 12:08:13 ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
பிந்திய செய்திகள்
உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 60000 இலங்கையர் வேலை வாய்ப்பு இழப்பு
[ 2010-02-09 03:59:58 ]
உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சுமார் 60000 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவலொன்று சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்]
மகிந்தவிற்கு ரஷ்யாவில் தங்கக் கிரீடம் வழங்கி கௌரவம்
[ 2010-02-09 03:49:03 ]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தின் போது மேற்கொண்ட சேவைகளை கௌரவிக்கும் வகையில் ரஷ்யாவில் தங்கத்திலான அற்புதமான கிரீடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
செய்திகள்
சரத் பொன்சேகாவுக்கு இராணுவச்சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:30.07 AM ]
கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு இராணுவ நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. [மேலும்]
லசந்த படுகொலை தொடர்பில் இரண்டு இராணுவ உயரதிகாரிகள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:26.04 AM ]
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
இலங்கையின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும்: இஸ்ரேல் ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:21.15 AM ]
இலங்கையின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]
வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட்ட இயந்திர சாதனங்கள் சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:14.02 AM ]
வடக்க கிழக்கு பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த பாரிய இயந்திர சாதனங்களில் சில சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. [மேலும்]
பேச்சுக்கு அரசு அழைத்தால் அதற்குத் தயார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:43.53 AM ]
இனப் பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேச்சு நடத்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுப்பாரானால், அதனைச் சாதகமாகப் பரிசீலிக்கத் தாங்கள் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
சர்வாதிகார ஆட்சியுள் நுழையும் இலங்கை: கனடியத் தமிழர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:32.34 AM ]
இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். [மேலும்]
அரசியல் எதிர்க்கட்சியை உடைப்பதே சரத் பொன்சேகாவின் கைதுக்கான நோக்கம்: சர்வதேச மன்னிப்பு சபை
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:51.32 AM ]
இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகா கைதை அடுத்து மக்கள் பொறுமைக்காக்கவேண்டும்: பான் கீ மூன்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:46.39 AM ]
இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகாவின் கைது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்கா எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:41.16 AM ]
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது,  இலங்கையில் யுத்த மீட்சிக்கு பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது. [மேலும்]
ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார்.
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 08:26.53 PM ] []
ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
புதிய பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் மீண்டும் திரும்பி வருவோம்: ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:00.10 PM ]
எதிர்வரும் புதிய ஏழாவது பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் தெரிவு செய்யப்படும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் திரும்பி வருவேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். [மேலும்]
பொலிஸாரின் இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:32.37 PM ]
இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்த சுமார் 202 பொலிஸாரின் இடமாற்றங்களில் உயர் அதிகாரிகளின் இடமாற்றங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துக்கான உத்தரவை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்துள்ளார். [மேலும்]
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:56.16 AM ]
இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் காலம் மேலும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னரே குடியமர்த்தப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்