செய்திகள்
[ Wednesday, 22-05-2013 13:53:02 ] []
மட்டக்களப்பு- செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 29ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
[ Wednesday, 22-05-2013 12:42:54 ]
இரவு ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இ.போ.ச. உத்தியோகத்தருக்கு குளிர்பானத்துடன் மயக்க மருந்தினைக் கலந்து அருந்தக் கொடுத்து பணம, நகை மற்றும் கைத் தொலைபேசி ஆகியனவற்றை திருடிச் சென்ற சம்பவமொன்று கொழும்பு-பதுளை இரவு தபால் ரயிலில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 12:35:09 ]
கொழும்பு, கொம்பனி வீதி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
[ Wednesday, 22-05-2013 11:18:19 ] []
கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
[ Wednesday, 22-05-2013 11:00:08 ]
வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் எனவும், அதற்காக அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றிணைக்க தான் தயார் எனவும்  தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 10:43:13 ]
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.
[ Wednesday, 22-05-2013 10:32:04 ]
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட எதிரிகள் அதனை மறுதளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
[ Wednesday, 22-05-2013 10:23:55 ]
18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு
[ Wednesday, 22-05-2013 10:21:30 ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சுவிஸ் கிளையினரால் கவிஞர் சு.திருப்பரங்குன்றனின் `நிஜத்தின் நிழல்` எனும் நூல் அறிமுக விழா சூரிச்சில் 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், நிறைந்த சபையுடன் வெகு விமர்சிகையாக நடைபெற்றது.
[ Wednesday, 22-05-2013 10:14:07 ] []
இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லைத்தீவுக் கிளையில் பணியாற்றும் பணியாளர்கள் பெண்களை அழைத்து விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 22-05-2013 10:03:40 ]
அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
[ Wednesday, 22-05-2013 09:50:19 ]
ஒரு இனத்தவர்களுக்கு மாத்திரம் முழு நாட்டையும் உரிமை கோரும் எந்த ஒரு கருத்தையும், இந்நாட்டில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்ட சிங்களவர்களும் நிராகரிக்கின்றோம் என பொதுபல சேனாவின் பொது செயலாளர் வண. ஞானசார கலபொட தேரருக்கு சொல்ல விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
[ Wednesday, 22-05-2013 09:27:12 ]
வடக்கில் காணாமற் போனாதாக கூறப்பட்ட 36 பேர் உயிருடன் உள்ளதாக அரசு ஜெனிவாவில் அறிவித்து 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அது வெறும் பொய் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
[ Wednesday, 22-05-2013 08:16:23 ]
தாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் ஷினவாத்ரா இலங்கை பாராளுமன்றில் உரையாற்றவுள்ளார். இது குறித்த அறிவிப்பை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இன்று  பாராளுமன்றில் வெளியிட்டார்.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 22-05-2013 08:09:23 ]
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சிதைந்து பல கூறுகளாக பிளவடையும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.