செய்திகள்
ஜனாதிபதி, கோத்தபாய, சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு களனி பல்கலைக்கழகம் கௌரவம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:31.47 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு களனி பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டங்களை வழங் கௌரவிக்க உள்ளது. [மேலும்]
அகற்றக் கூடிய உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:25.01 AM ]
அதி உயர் பாதுகாப்பு வலய கொள்கை தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, அகற்றப்படக் கூடிய உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.  [மேலும்]
தமிழர்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்துள்ள ஜனாதிபதி, தமிழ் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கும் நாடகம்: மங்கள எம்.பி.
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:20.46 AM ]
அப்பாவித் தமிழ் மக்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்து வைத்துள்ள ஜனாதிபதி, தமிழ் குழந்தைகளை கண்டால் வாரியணைத்து முத்தம் கொடுக்காமல் விடமாட்டார். இவ்வாறு நடந்துகொள்வதில் வெட்கமில்லையா? என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம். பி. தெரிவித்தார். [மேலும்]
போரில் சிக்கி உயிரிழந்த மக்களின் மரணச் சான்றிதழைப் பெறுவதில் உறவினர்கள் சிரமம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 02:38.25 AM ]
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் சிக்கி உயிரிழந்த மக்களின் மரணச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு மக்கள் பிரதேச செயலகங்களுக்கும், பதிவாளர் அலுவலகத்துக்கும் அலைந்து திரிகின்றனர். இதனால் அவர்கள் வீண் சிரமங்களுக்கு உள்ளாவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இராணுவம் வழிகாட்டும் பயணம் என்பதால் முகாம்களுக்கு செல்லும் அழைப்பை நிராகரித்தேன்: சிவசக்தி ஆனந்தன்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 02:16.24 AM ]
இராணுவத்தினரின் வழிகாட்டுதலுடனான பயணம் என்பதால் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்குச் செல்வதற்கான அழைப்பைத் தான் நிராகரித்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
வாடகைக்கு வீடு தேடுகிறார் சரத் பொன்சேகா: உரிமையாளர்கள் மிரட்டப்படுவதால் பெறுவதில் சிரமம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 02:02.47 AM ]
சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதால், மிகக் குறுகிய காலத்தில் பொருத்தமான வீடொன்றைப் பெறுவதில் அவர் பலத்த சிரமத்தை எதிர் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. [மேலும்]
வடக்கு - கிழக்குக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடையை ஜப்பான் நீக்கியது
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 04:03.50 PM ]
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தமது நாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு  விடுக்கப்பட்டிருந்த தடையை, ஜப்பான் அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஜனாதிபதியின் உருவத்துடன் 1000 ரூபா நாணயத்தாள் வெளியீடு: மங்கள சமரவீர எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:49.11 PM ]
இன்னும் ஓரிரு தினங்களில், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத்ததாள், வெளியிடப்பட்டமைக்கு மங்கள சமரவீர எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். [மேலும்]
ஐக்கிய தேசிய முன்னணியில் கட்சிகளை இணைப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 02:53.24 PM ]
ஐக்கிய தேசிய முன்னணியில் கட்சிகளை இணைத்துக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரண்டு பேரைக்கொண்ட குழு  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை உருவாக்கப்பட வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 02:43.29 PM ]
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்துள்ளார். [மேலும்]
உயிர்நீத்த தமிழர்களுக்காகத் தியாகத் தீபங்கள் ஏற்றுவீர்: பழ.நெடுமாறன் வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 02:11.23 PM ]
இலங்கைப் போரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும், மற்றும் ஈழத் தமிழர்களுக்காக பல்வேறு நாடுகளில் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த தமிழர்களுக்கும் வரும் நவம்பர் 27 ம் திகதியன்று தியாகத் தீபங்கள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். [மேலும்]
மன்னாரில் நிலக்கண்ணி வெடி அகற்றலில் ஈடுபட்ட இருவர் படுகாயம்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:35.22 PM ]
மன்னார் பிரதேசத்தில் மாந்தை மேற்கு பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், தற்செயலாக கண்ணி வெடி வெடித்ததில் காயமடைந்து, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
மற்றுமொரு அரசாங்க ஆதரவு மலையகக் கட்சி எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ளது
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 08:25.57 AM ]
அசராங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வந்த மற்றுமொரு மலையக தமிழ் கட்சியொன்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 08:21.04 AM ]
ஜே.வி.பியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
எஸ்.பி. ஆளும் கட்சியில் இணைவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது: ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 08:17.16 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானதென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்