Switch to
செய்திகள்
ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான ஐ.தே.க. பா.உறுப்பினர் பிணையில் விடுதலை
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 07:43.23 AM ]
ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கைதுச்செய்யப்பட்டு கடந்த எட்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெருமவுக்கு இன்று சரீர பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி நாளேடு ஆசிரியர் தலையங்கம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:39.44 AM ]
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்துள்ளது. [மேலும்]
இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நியமனம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:35.26 AM ]
இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உயர்ஸ்தானிகராக உள்ள பீட்டர் ஹெய்ஸ்க்கு பதிலாக இவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
நடமாடும் பதிவுசேவையில் கலந்துகொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:29.50 AM ]
02.09.2010 வியாழக்கிழமை அன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பா.உ. சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ளார். [மேலும்]
நிருபமராவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:23.37 AM ] []
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக் காந்தா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள் இந்திய தரப்பிலும், அமைச்சர் ஜீ.எர்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இலங்கை சார்பிலும் கலந்துகொண்டனர்.   [மேலும்]
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான நிதிக்காக கனடியத் தமிழர்கள் நடாத்தும் இசை நிகழ்ச்சி
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:03.38 AM ]
புற்றுநோய் எதிர்ப்பு நிதிக்காக கனடியத் தமிழ் சமூகம் பாரிய அளவில் கூடி ஸ்காபறோவின் மெட்றோபொலிட்டன் மையத்தில் இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்த ஏற்பாடாகி உள்ளது. [மேலும்]
அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்கள் ஜே.வி.பி. நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:53.24 AM ]
அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக ஜே.வி.பி.தெரிவித்துள்ளது. [மேலும்]
ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியச் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நானே முழுப்பொறுப்பு: டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:49.13 AM ]
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகத் தென்னிலங்கைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களின் பாதுகாப்புக்கு தாம் பொறுப்பேற்பதாக, பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கினார். [மேலும்]
இந்திய அரசின் அனைத்து உதவிகளும் வன்னி மக்களை நேரடியாக சென்றடையும்: த.கூட்டமைப்பினரிடம் நிருபமா உத்தரவாதம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:28.55 AM ]
இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் அனைத்து உதவிகளும் அந்த மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கு இந்தியா உத்தரவாதம் அளித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் 32 பேர் சைபிரஸில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:19.53 PM ]
அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட்ட 32 பேர் சைபிரஸ் நாட்டில் மீட்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 10 ஆயிரம் வீடுகள்: முதலமைச்சரிடம் நிருபமா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:06.35 PM ] []
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கவுள்ளதாக அதன் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். [மேலும்]
சண் சீ தமிழ் அகதி கோரிக்கையாளர்களை கனேடிய பா.உ. பீட்டர் ஜுலியன் பார்வையிட்டுள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:53.05 PM ] []
பெர்னபி – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களை பேர்ணபி -நியூ வெஸ்ட்மினிஸ்டர் பிரதேச புதிய சனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பீட்டர் ஜுலியன் பார்வையிட்டார். மனித உரிமைகள் சேவைகள் உதவி மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் வழங்கப்படுதல் தொடர்பாக அக்கறை வெளிப்படுத்தியுள்ளார். [மேலும்]
அரசியல் சீர்திருத்தத்தை எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:36.07 PM ]
அரசாங்கம் முன்வைக்க தீர்மானித்திருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய தேசிய கட்சி முடிவெடுத்துள்ளது [மேலும்]
வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்: சிவசக்தி ஆனந்தன் பா.உ. ஜனாதிபதிக்குக் கடிதம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:07.29 PM ] []
வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் குறைபாடுகளை உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். [மேலும்]
இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்த அரசாங்கம் இதுவரையில் செய்தவை என்ன?- நிருபமா ராவ் கேட்டு சொல்ல வேண்டும் என்கிறார் மனோ கணேசன்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 01:36.59 PM ]
புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் ஓய்ந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு இந்த அரசாங்கம் உருப்படியாக செய்திருப்பவை எவை என்ற பட்டியலை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா அரச தலைவரிடம் கேட்டு வாங்கி தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement