செய்திகள் 2009-11-03
(2ம் இணைப்பு)
ஆஸி கடலில் படகு விபத்தில் காணாமல் போயுள்ள இலங்கைத் தமிழர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது: இதுவரை மூவரின் சடலம் மீட்பு
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 04:05 PM]
ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் ஒருவரின் உடல் மட்டும் நேற்று மீட்கப்பட்டது. ஏனையவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
[மேலும்]
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமது குடும்பத்தாருடன் சத்தியாக்கிரக போராட்டம்
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 03:48 PM]
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இன்று பாராளுமன்ற வீதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை தமது குடும்பத்தினருடன் மேற்கொண்டார். [மேலும்]
கனடாவிற்கு சென்ற கப்பல் புலிகளுடையதா? விசாரணை தொடர்கிறது
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 03:35 PM]

கனடாவில் கடந்த 17 ம் திகதி கைதான இலங்கையிலிருந்து சென்ற கப்பல் புலிகளுக்கு சொந்தமானதா என்பதை கண்டுபிடிக்க கனடிய புலனாய்வுத் துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]

இனப்படுகொலையாவது ஒன்றாவது...!: ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் தமிழவன்
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 03:21 PM]
இலங்கையில் நடந்த இன அழிப்பு, மேற்கத்திய நாடுகளை உலுக்கிய அளவுக்கு இந்தியாவை உலுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளை உலுக்கியதால் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று கூறி அனைத்துலக நாணய நிதியம், இலங்கை கேட்ட சுமார் 2.6 பில்லியன் டொலர் பணத்தை உடனே கொடுக்கவில்லை. இவ்வாறு போலந்து நாட்டு வார்ஸா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் தமிழவன் இந்திய தினமணியில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
மட்டு.கல்லடி இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: படைச்சிப்பாய் பலி; அதிகாரி உட்பட மூவர் காயம்
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 01:23 PM]
மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவைச்சேர்ந்த சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் அப்பிரிவைச் சேர்ந்த இராணுவ லெப்டினன் தர அதிகாரி ஒருவரும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர் [மேலும்]
நாம் உணர்ந்துகொள்ளத் தவறும் படகுத் தமிழர்களின் துயரம்: பாரிஸ் ஈழநாடு
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 01:14 PM]
சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது. [மேலும்]
கொலைசெய்யப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நியாயமான விசாரணை இடம்பெறுவது சந்தேகம்
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 09:35 AM]
பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டமை பொலிஸ் அராஜகத்தின் உச்சக்கட்டம். இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் இலங்கை கொலைகார நாடாக மாறிவிடும் என்று ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
[மேலும்]
யுததததில் பலியான படைவீரர்களை அரசாங்கம் மறந்து விட்டது: ரணில் விக்கிரமசிங்க
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 09:00 AM]
இறுதி யுத்தத்தின் குறிப்பிட்ட ஒரு தாக்குதலில் மாத்திரம் கொல்லப்பட்ட 5,000 படை வீரர்களுக்கும், காயமடைந்த 20,000 வீராகளுக்கும் அரசாங்கம் கௌரவம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்]
மன்னாரில் அரச கணக்காளர் ஒருவர் கைது
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:55 AM]
மன்னாரில் உள்ள தேசிய நிதி முகவர் நிலையத்தின் தலைமை கணக்காளர் ஒருவர் நேற்று கண்டி புலனாய்வு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
மாதுரு ஓயா இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:50 AM]
அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் இன்று மாதுரு ஒயா இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
வடக்கில் 5000 ஏக்கர் தெங்குச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:31 AM]
வடக்கில் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக தெங்குச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப்படும் என ஐ.தே.க, ஜே.வி.பி. தெரிவிப்பு
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:28 AM]
எதிர்வரும் 5ம் திகதி அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
[மேலும்]
சட்டவிரோத குடியேற்றவாசிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:24 AM]

வெளிநாடுகளில் வழி மறிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளைத் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சு கேட்டுள்ளது. [மேலும்]

எதிர்க்கட்சிகளின் பொதுவான கூட்டணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:15 AM] []

இலங்கையின் புதிய எதிர்க்கட்சி கூட்டணி இன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியகட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியே இன்று முற்பகல் இலங்கையின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. [மேலும்]

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அமெரிக்காவிற்கு உரிமையில்லை: விமல் வீரவன்ச
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:11 AM]
யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த அமெரிக்காவிற்கு எவ்வித உரிமையும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி தொடர்பில் அமெரிக்கா எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:07 AM]
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியிடம் நடத்தப்படவுள்ள விசாரணைகள் தொடர்பில் அமெரிக்கா எவ்வித கருத்தையும் வெளியிடாது மௌனம் காத்து வருவதாக உலக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. [மேலும்]
போர் குற்றங்கள் புரிந்ததாக பொய்யான தகவல்களை வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்கள் கண்டு பிடிப்பு
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:03 AM]
இராணுவப் படையினர் போர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய மூன்று அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகாவிடம் விசாரணை தொடர்பில் ரணில், ரொபர்ட் ஓ பிளக்கிடம் விளக்கம்
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 07:57 AM]
கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்க நடத்தவுள்ள விசாரணைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கிடம் விளக்கம் கோரியுள்ளார். [மேலும்]
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பவிருக்கும் சரத் பொன்சேகாவைக் காத்திருக்கும் காலம்(ன்)....... : சங்கிலியன்
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 03:05 AM]
தனது கிரீன்காட் விசாவை புதுப்பிக்கவும், மற்றும் சில சுய அலுவல்கள் காரணமாகவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த முன்னாள் இலங்கையின் இராணுவத் தலைமை அதிகாரியான சரத் பொன்சேகாவினை அமெரிக்க அரசு, மனித உரிமைமீறல் தொடர்பாகவும், இலங்கை அரசின் யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் பல விசாரணைகள்....... [மேலும்]
பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 02:25 AM] []
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளான நவம்பர் 27ல் இப்புனிதர்களை பெற்றெடுத்த பெற்றோர்களையும், அவர்களின் இரத்த உறவுகளையும் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரான்சில் இவ்வாண்டும் வழமைபோல் நடைபெறவுள்ளது.  [மேலும்]
எதற்காகவும் யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன்: சரத் பொன்சேகா தெரிவிப்பு
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 02:05 AM]
எனது தனிப்பட்ட நன்மைகளுக்காக நான் எவரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவிலுள்ள ஹெல உறுமயவின் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். [மேலும்]
அகதிகள் விடயத்தில் இலங்கை அரசு திடீர் அக்கறை: ஜி.எஸ்.பி. சலுகைக்கு "ஐஸ்" வைக்கிறதா?
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 02:01 AM]
அரசின் நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் திடீர் அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ளமையானது கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. [மேலும்]
லண்டனில் நடைபெற்ற தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 01:51 AM] []
கடந்த (31-10-2009) சனிக்கிழமையன்று லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களதும் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
[மேலும்]
கே.பி.யின் விசாரணை தொடர்பாக இலங்கை - இந்தியா உறவில் விரிசல்
[செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 01:33 AM]
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருக்கும் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீதான விசாரணை தொடர்பாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதென்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்