| கே பி அரசியலில் பிரவேசிக்கும் எண்ணமில்லை: விநாயகமூர்த்தி முரளிதரன் |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 04:05 PM] |
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது என அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார் [மேலும்] |
| ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இன்று தமக்கு தாமே தீமூட்டினார் |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 03:49 PM] |
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரான ரியன்சி அல்கம என்பவர் இன்று மாலை தமக்கு தாமே தீமூட்டிக்கொண்ட சம்பவம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவின் முன்னால் இடம்பெற்றுள்ளது. [மேலும்] |
| கனடா ரொரன்ரோவில் நடைபெற்ற கறுப்பு யூலை கண்டனப் பேரணி 2010 |
[திங்கட்கிழமை, 26 யூலை 2010, 03:38 PM] [ ] |
ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 6 மணிக்கு ரொரன்ரோ பாராளுமன்றம் Queen’s Park முன்றலில் கனடியத் தமிழர்கள் நடாத்திய பாரிய கறுப்பு யூலை ஒன்றுகூடலில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். [மேலும்] |
| பிரான்சில் நடைபெற்ற கறுப்பு யூலை கண்டனப் பேரணி 2010 |
[திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:59 PM] [ ] |
பிரான்சின் தலைநகர் பாரிசில் கறுப்பு யூலை கண்டனப் பேரணி நடைபெற்றது. 1983 யூலை 23 தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறியர்களால் நடாத்தப்பட்ட இனவழிப்பு நடைபெற்று 27ஆண்டுகள். இரக்கமற்ற அரக்கர்களால் தமிழ் மக்கள் துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்டு இனப்படுபொலை செய்யப்பட்ட நாள். [மேலும்] |
| இலங்கைக்கு நடிகர்கள் யாரும் போகக் கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள நடிகர் சங்கத்துக்கு உலகத் தமிழினம் நன்றி தெரிவிப்பு |
[திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:41 PM] [ ] |
தமிழர்களைக் கொன்று குவித்துக் கோரத்தாண்டவம் ஆடிவரும் சிங்கள வெறியர்கள் ஆட்சி நடத்தும் இலங்கைக்கு நடிகர்கள் யாரும் போகக் கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள நடிகர் சங்கத்துக்கு உலகத் தமிழினம் தனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. [மேலும்] |
| (3ம் இணைப்பு) |
| தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சிவந்தன் அழைப்பு |
[திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:15 PM] [ ] |
தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார். [மேலும்] |
| அரச சார்பற்ற நிறுவனங்களின் விருப்பங்களுக்கு அமைய அரசியலமைப்பு மாற்றப்படாது: ஜனாதிபதி |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 12:53 PM] |
 அரச சார்பற்ற நிறுவனங்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| போர்க்குற்ற இராணுவ தளபதி தூதராக நியமனம்: ஜெர்மனி மீது இலங்கை தமிழர்கள் வழக்கு பதிவு |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 11:28 AM] |
இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராணுவ தளபதி ஒருவர், ஜெர்மனி நாட்டு தூதராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிஸ் மற்றும் நோர்வே நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
[மேலும்] |
| பொலிஸாருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய 6 பல்கலை.மாணவர்கள் கைது |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 10:28 AM] |
றுகுணு பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு பொலிஸாரே காரணம் எனக்கூறி எதிர்ப்பு சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த 6 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
| வவுனியாவில் தொழில் அதிபர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார் |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:39 AM] |
வவுனியாவில் பிரபல்யமான தொழில் அதிபரான மா.கதிர்காமராஜா என்பவர் (புஷ் என்ற புனை பெயரால் அழைக்கப்படுபவர்) கடந்த வெள்ளிக்கிழமை 24/07/10 அன்று இரவு இனம் தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். [மேலும்] |
| எம்.வீ. சன் சீ கப்பல் எங்கே? கனேடிய அதிகாரிகள் தகவல் தர மறுப்பு |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:27 AM] |
இலங்கை அகதிகளுடனான எம் வீ சன் சீ கப்பல் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றது என்பது குறித்த தகவல்களை அறியமுடியாதிருப்பதாக கனேடிய செய்திகள் தெரிவித்துள்ளன. [மேலும்] |
| யுத்தத்தினால் கணவர்மாரை இழந்த பெண்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:14 AM] |
யுத்தத்தினால் கணவன்மாரை இழந்த வடக்கில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள், பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும்: ஜே.வி.பி |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:08 AM] |
இலங்கை பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய, பதவி விலக வேண்டும் என, ஜே வி பி வலிறுயுத்தியுள்ளது. [மேலும்] |
| மட்டக்களப்பில் படையினரால் புதிய புத்த விஹாரை நிர்மாணம் |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:01 AM] |
மட்டக்களப்பு, கண்ணகிபுரம் தமிழ் கிராமத்தில், சிறப்பு அதிரடி படையினரால் புத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் முருகன் ஆலயம் ஒன்றை நியமிப்பதாக கூறி, முன்னதாக அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். [மேலும்] |
| அரச சார்பற்ற நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் பிரவேசிக்க தடை |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:50 AM] |
அரச சார்பற்ற நிறுவனங்களை யாழ்ப்பாணத்தில் பிரவேசிக்கவும், அரசாங்கம் தடை விதித்து வருவதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
| யாழ்ப்பாண விபத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலி |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:41 AM] |
யாழ்ப்பாணம் பழம் வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். [மேலும்] |
| இராணுவப் படையின் உயர் பதவிகளில் மாற்றம்: லக்பிம |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:20 AM] |
இராணுவப் படையின் உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| முன்னைய சுகாதார அமைச்சு விட்ட தவறுகளே மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணம்:மைத்திரிபால |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:14 AM] |
முன்னைய சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளே தற்போதைய மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கான பிரதான காரணம் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். [மேலும்] |
| முதலில் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும்: எதிர்க்கட்சி |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:10 AM] |
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. [மேலும்] |
| புலிகளுடன் தொடர்புடைய நபர் கைத்துப்பாக்கியுடன் கைது |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:06 AM] |
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் தீர்மானம் |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:02 AM] |
பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை செவ்வாய்க்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சந்திக்க கூட்டமைப்பு முயற்சி |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:26 AM] |
வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிப் போராளிகளைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். [மேலும்] |
| முல்லை. வைத்தியசாலைக்கு ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்? |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:14 AM] |
மணலாறு காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிய ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக வன்னியில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. [மேலும்] |
| ஐ.நா நோக்கிய நடை பயணம்: சிவந்தன் காலையில் டோவரை சென்றடைவார் |
[திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:03 AM] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் இன்றிரவுவரை 62 மைல்களை எட்டியுள்ளது. டோவரை அடைவதற்கு இன்னும் 14 மைல்கள் அவர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இத்தகவல் 25-07-2010 (இரவு 11:00 மணி) க்கு கிடைத்தது
[மேலும்] |
| கொழும்பு, சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும்: விஜயகலா பா.உ. |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:25 AM] |
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] |
| ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை: உயர் இராஜதந்திரி தகவல் |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:11 AM] |
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்ற விவகாரங்கள் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த நிபுணர் குழு, இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று அமெரிக்காவில் செயலாற்றும் இலங்கை உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| தமிழர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்குவது சட்டவிரோதம்: சர்வதேச சமூகத்திற்க இலங்கை எச்சரிக்கை |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 12:50 AM] |
சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வின் பேரில் அரசியல் புகலிடம் அல்லது அகதிகள் அந்தஸ்து வழங்கப்படுவதால் சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே அமையும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] |
| தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள்! பெளத்தத்தை தமிழ் மக்கள் மீது திணிக்கும் செயல்!! |
| [திங்கட்கிழமை, 26 யூலை 2010, 12:27 AM] |
வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் நிறுவப்படும் புத்தர் சிலைகளுக்கு ஆயுதமேந்திய படையினர் பாதுகாப்பு கொடுப்பதென்பது சிங்கள பெளத்தத்தை தமிழ் மக்கள் மீது திணித்தலின்றி வேறென்ன!!!!! [மேலும்] |