இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது
வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் சிக்கல் தோன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்படுகின்ற வெற்றிவிழா கொண்டாட்டங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றிக் கொள்ளும் வகையில் அமையாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
சட்டத்துக்கு முரணான வகையில் வியட்நாமிற்கு சிங்கி இறால்களை கடத்திச் செல்ல முயன்ற இருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட பெண், இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் எல்பிட்டிய பிட்டிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான முதல் காலாண்டில் சர்வதேச அளவில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 18.18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்தியாவில் ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு என்று லண்டனுக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக் கற்பழித்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த ஒருவர், 160ற்கும் அதிகமான வாகனம் சம்பந்தப்பட்ட பொருட்களைத் திருடியதாக புதன் கிழமை அன்று ஈஸ்ர் என்ற பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் ஒயிட் மண்டே(Whit Monday) என்ற பெயரில் விடப்படும் நீண்ட விடுமுறையின் பொழுது, கிழக்கில் இருப்பவர்கள் வெப்பச் சூழ்நிலையையும், மேற்கில் இருப்பவர்கள் குளிர்ந்த தட்ப வெப்பத்தையும் அனுபவிக்க நேரிடும்.