பிரதான செய்திகள்
யுத்தம் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடவில்லை – கொழும்பு பேராயர் மறுப்பு
[ 2008-07-24 10:02:54 ]
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு எட்டப்பட வேண்டுமெனத் தாம் வத்திக்கான் வானொலிக்குத் தெரிவிக்கவில்லை எனக் கொழும்பு பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் தெரிவித்தார்.எமது இணையத் தளமான தமிழ் வின்னுக்குப் பேராயர் அளித்த விசேட செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டார். [மேலும்]
“நாம் திரும்பிச் செல்ல விடுதலைப் புலிகள் வழிசமைப்பார்கள்” - இடம்பெயர்ந்த மக்கள் நம்பிக்கை!
[ 2008-07-24 06:53:46 ]
மல்லாவி துணுக்காய்ப் பகுதிகளிலுள்ள மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்தமை இதுவே முதற்தடவை எனவும் தங்கள் வீடுகளிலுள்ள பொருட்கள் பெருமளவிலான ஆடுமாடுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு..... [மேலும்]
பிந்திய செய்திகள்
கஞ்சிக்குடிச்சாறில் இலங்கை அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்
[ 2008-07-24 14:07:26 ]
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியை அண்டிய உடும்பன்குளம் பகுதியில் புதிதாக முகாம் நிறுவிக்கொண்டிருந்த  இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர். [மேலும்]
பிள்ளையான் பதவியேற்றது முதல் 22 காவல்துறை அதிகாரிகள் கிழக்கில் பலி – றங்க பண்டார
[ 2008-07-24 13:44:37 ]
கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பிள்ளையான் பதவியேற்றது முதல் இதுவரையில் 22 காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் றங்க பண்டார குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
செய்திகள்
“சார்க்” மாநாட்டுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 12:41.13 PM ]
கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. [மேலும்]
கச்சதீவு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கருணாநிதி மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 12:39.20 PM ]
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் இல‌ங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியப் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வ‌லியுறு‌த்தியுள்ளார். [மேலும்]
இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைபெறுகிறது – ஜே.வி.பி.
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 10:40.02 AM ]
தமிழ்நாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இந்திய அரசாங்கம் மற்றும்  "றோ" புலனாய்வுப் பிரிவினரின் ஆதரவுடன் நடைபெற்று வருவதாக ஜே.வி.பி. குற்றஞ் சாட்டியுள்ளது.  [மேலும்]
இந்தியாவிலிருந்து ஆயுதம் கடத்தப்படுவதனைத் தடுக்க விசேட பிரிவு
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 10:37.12 AM ]
இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் வடக்குப் பிரதேசத்திற்குக் கடத்தப்படுவதனைத் தடுக்கும் வகையில் விசேட கடற்படைப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சார்க் மாநாட்டின் போது இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது - இராணுவத் தளபதி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 10:34.38 AM ]
சார்க் மாநாட்டுக் காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாதென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். [மேலும்]
சார்க் மாநாடு காரணமாகக் குடியிருப்புக்கள் அகற்றப்படவில்லை – மைத்திரிபால சிறிசேன
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 10:33.22 AM ]
குடியிருப்புக்கள் மற்றும் கட்டிடங்கள் சார்க் மாநாட்டின் காரணமாக அகற்றப்படவில்லை எனவும், நகர அபிவிருத்திச் சபையின் ஓர் திட்டத்திற்கு அமையவே அகற்றப்பட்டதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  [மேலும்]
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் 800 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 10:32.03 AM ]
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களில் சுமார் 12 கோடி ரூபா செலவில் 800 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
அரசாங்கம் யுத்தத்தை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றது – ஜே.வி.பி.
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 09:17.09 AM ]
படைவீரர்கள் உயிர்த் தியாகங்களை மேற்கொண்டு முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்]
புலிகள் மீதான வான்தாக்குதல்களை அரசாங்கம் நிறுத்தியுள்ளது என்கிறது ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 08:31.00 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதான வான் தாக்குதல்களை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. [மேலும்]
கொம்பனித்தெருக் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 07:38.55 AM ]
கொழும்பு கொம்பனித்தெருக் குடியிருப்புக்களை உடைத்து அகற்றுவதற்கு எதிரான தடையுத்தரவை உயர் நீதிமன்றம் எதிர்வரும் 30ம் திகதி வரை மீண்டும் நீடித்துள்ளது. [மேலும்]
விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யுமாறு இலங்கை அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 07:25.03 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அவுஸ்திரேலிய அரசிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. [மேலும்]
பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை எட்ட முடியாது: யுத்தத்தின் மூலமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் - கொழும்பு பேராயர்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 06:56.22 AM ]
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு எட்டக்கூடிய காலம் கடந்து விட்டதாகக் கொழும்புப் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]
இடம்பெயரும் மக்களுக்குத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உதவி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 06:48.02 AM ]
தற்போது வெள்ளாங்குளம் முழங்காவில் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்குக் கொண்டு சென்று விடுவதற்கான போக்குவரத்து உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்டு வருகிறது. [மேலும்]
பொதுக் கணக்காளர் சபையைப் பகிஷ்கரிக்கப் போவதாக ஐ.தே.க எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 05:43.36 AM ]
பொதுக் கணக்காளர் சபையைப் பகிஷ்கரிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.பொதுக் கணக்காளர் சபையின் தலைமைப் பொறுப்பிற்கு ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. [மேலும்]
முன் அறிவித்தலின்றி இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யக் கூடாது - இந்திய அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 05:39.51 AM ]
முன் அறிவித்தலின்றி இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யக் கூடாதென இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் (படம் இணைப்பு)
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 04:43.32 AM ]
எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. [மேலும்]
சிறப்புச் செய்திகள்
கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து அமெரிக்காவில் விழிப்புக் கூட்டம்.
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 05:17.48 PM ]
இலங்கையின் மக்களுக்கான சமவுரிமை மற்றும் நிவாரணம் தொடர்பான ஆலோசனைச் சபையின் ஏற்பாட்டில், நாளையதினம் (வியாழக்கிழமை) அமெரிக்காவில் 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவுகூரும் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. [மேலும்]
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிள்ளையான் குழுவினர் ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 03:44.55 PM ]
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர்  இலங்கைக் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
வன்னிப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். - புலிகளின் சமாதானச் செயலகம்
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 11:25.53 AM ]
வன்னிப் பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் இவர்களில் 35 ஆயிரம் பேர் முன்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. [மேலும்]
"சார்க்' நாடுகள் வரிசையில் தமிழீழம் விரைவில் சேரும்! சிவாஜி எம்.பி. உறுதி
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 08:38.00 AM ]
சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றில் கூறினார். [மேலும்]
(2ம் இணைப்பு) அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இடம் பெயர்ந்த மக்கள் அவதி - மழைகாரணமாகவும் பெரும் அவலம் (படம் இணைப்பு)
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 03:15.06 AM ]
கடந்த 20 ஆம் திகதி முழங்காவில் அன்புபுரத்தில் நடத்தப்பட்ட கிபிர் விமானத் தாக்குதல் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதலைத் தொடாந்து அப்பகுதி மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் அதேவேளை இடம்பெயர்நது வரும் இம்மக்கள் இருப்பிட வசதி உட்பட அடிப்படை வசதிகள்இன்றிப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் [மேலும்]

இணைப்புக்கள்
இணைய செய்திகள் வீடியோ செய்திகள்
 தமிழ்ஓசை  லங்காஸ்ரீ TV
 புதினம்  
 லங்காஸ்ரீ தமிழ் சஞ்சிகைகள்
 நிதர்சனம  வீரகேசரி
 சங்கதி  தினக்குரல்
 பதிவு  உதயன்
 தமிழ்நாதம  மட்டக்களப்பு ஈழநாதம்
 ஈழம் நியூஸ்  நமது ஈழநாடு
 விகடன்
English News  அம்பலம்
 Good Srilanka.com  சுடர் ஒளி
 Tamilnet  ஈழமுரச
 LTTE Peace Secretariat  குமுதம்
 Reuters  தினகரன்
 Tamil Canadian  தினத்தந்தி
 MSNBC  விடுதலை
 Yahoo  தினபூமி
 BBC  தினமணி
 Google  மாலைச்சுடர்
 CNN  தினமலர்
 Tamil Guardian  மாலைமலர்
 Worldnews  எரிமலை
   நக்கீரன்
ஆடியோ செய்திகள்
 ஐ.பி.சி தமிழ்
 பி.பி.சி தமிழோச  
 புலிகளின் குரல்
 உலகத்தமிழ்செய்தி