பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதால், விரைவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்வார் என துமிந்தவின் தந்தையான லால் சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், பலாலி மற்றும் காங்கேசன்துறை பாதுகாப்பு வலயப்பகுதி விஸ்தரிக்கப்படக்கூடாது என்று இந்தியா இலங்கையிடம் கோரியதாக என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகளை வழங்காது திட்ட மிட்ட குடியேற்றங்களை அநீதியான முறையில் ஊக்குவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இணக்கம் ஒன்றை எட்டும் முகமாக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த முதிரை மரக் குற்றியையும் உழவு இயந்திரத்தினையும் வாழைச்சேனை பொலிஸார் இன்று (சனிக்கிழமை) காலை கைப்பற்றியுள்ளனர்.
விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்,
13வது அரசியலமைப்பின், மாகாண சபைகளுக்கு உரித்தான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்ளை விலக்கி கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கோரவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்தியாவில் ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு என்று லண்டனுக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக் கற்பழித்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த ஒருவர், 160ற்கும் அதிகமான வாகனம் சம்பந்தப்பட்ட பொருட்களைத் திருடியதாக புதன் கிழமை அன்று ஈஸ்ர் என்ற பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் ஒயிட் மண்டே(Whit Monday) என்ற பெயரில் விடப்படும் நீண்ட விடுமுறையின் பொழுது, கிழக்கில் இருப்பவர்கள் வெப்பச் சூழ்நிலையையும், மேற்கில் இருப்பவர்கள் குளிர்ந்த தட்ப வெப்பத்தையும் அனுபவிக்க நேரிடும்.