2012 இல் நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் மீள்பதிவுகள்

நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப் பாரடா என்பதற்கிணங்க, மனித சமுதாயத்தில் கடந்த காலம் என்பது மிக முக்கியமானதொன்றாகும். ஒரு நாட்டில் வரலாறு என்பது கடந்த கால  நிகழ்வுகளைக் கொண்டே பதியப்படுகிறது.

அந்தவகையில், நாம் புதியதொரு ஆண்டில் (2013) கால்பதிக்க தயாராகி விட்டாலும் கடந்த 2012ம் ஆண்டின் பல நிகழ்வுகள் எம்மனதில் ஆழமாக இடம்பிடித்து விட்டுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரையில் அதுவும் தமிழர்களைப் பொறுத்தவரையில் மிக மறுக்க முடியாத பல நிகழ்வுகள் 2012ம் ஆண்டில் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

எனவே 2012ம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் மீள்பதிவுகளை தொகுப்பாக்கி ஒரே பார்வையில் உங்களுக்காக....!

விடுதலைப் புலிகளின் முத்திரைகள் வெளியீடு
விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த முத்திரைகளை பல புலம்பெயர்நாடுகளில் வெளியிட்டு, தமிழீழத்தை உலகெங்கும் நிலைநாட்டவும் உலகநாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்பதற்காகவும் பற்பல போராட்டங்களின் மத்தியிலும் தலைவர் பிரபாகரன் அவர்களின் முகம், புலிக்கொடி, மற்றும் தமிழீழ சின்னங்கள் போன்றவற்றை முத்திரைகளாக்கி வெளீயிட்டுள்ளனர். இருப்பினும் அம்முத்திரைகள் ஒட்டி அஞ்சலிடப்படும் தபால்கள் எதுவும் விநியோகிக்கப்படமாட்டாது என இலங்கை அரசு தனது கோபத்தைக் காட்டியது.
அவை சம்பந்தமான விபரங்களை பார்வையிட..

ஐ.நாவில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட குற்றப் பிரேரணை
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது.உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கிய விடயமாக மாறியிருந்தது.

சிறைச்சாலையும் கைதிகளும்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு அடிக்கடி மாற்றுவதும், அவர்களுக்கான உரிய தீர்ப்பு வழங்காமல் காலவரையறையின்றி தடுத்து வைத்திருப்பதனாலும் சிறைச்சாலைகளில் அவ்வவ்ப்போது கலவரங்கள் வெடித்துவந்தன. மேலும் பல அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலேயே உயிரிழந்துள்ள சம்பவங்களும் நடந்தன. அண்மையில் வெலிக்கடைச் சிறையில் மாபெரும் கலவரம் ஏற்பட்டு பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

முள்ளிவாய்க்கால் யுத்தமும் ஐ.நா. இரகசிய அறிக்கையும்
இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா சபை மோசமாகத் தவறியுள்ளது என்று .ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஒரு இரகசிய அறிக்கை பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவ் அறிக்கையின் பல பகுதிகள் கறுப்புமையினால் அழிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அப்பக்கங்களும் வெளியாகியமை இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

முன்னாள் போராளிகளும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும்
சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு, அவர்களுக்கு பலவழிகளில் நிவாரணங்களும் பல வசதிகளையும் வழங்கியுள்ளது அரசாங்கம். இருப்பினும் அண்மையில் யாழ், கிளிநொச்சி, முல்லத்தீவு மாவட்டங்களில் இராணுவப் புலனாய்வாளர்களால் பலர் கைதாகியுள்ளபோதிலும் அவர்களுள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளிகளும் அடங்கியுள்ளனர்.

பிரதம நீதியரசர் விவகாரம்
திவிநெமு சட்டத்தை அமுலாக்க முடியாது என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்ததை அடுத்து அவரைப் பழிவாங்கும் முகமாக அவர் மீது குற்றப் பிரேரணையை தாக்கல் செய்தது அரசு.

தமிழீழ மாவீரர் நாள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாவீரர் நாள் என்பது ஒரு புனிதநாள். ஈழ விடுதலை வானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள் பனிக்க மலர்தூவிச் சுடரேற்றி வழிபடும் திருநாள். இத்திருநாளை புலம்பெயர் நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக இம்மாவீரச் செல்வங்களுக்காக அஞ்சலி செலுத்தி வந்தனர்.

மாவீரர்நாளும் பல்கலைக்கழக மாணவர்களும்
2012ம் ஆண்டு திருக்கார்த்திகை விளக்கீட்டு நாளும் மாவீரர் நாளும் ஒரேதினம் வந்ததனால், யாழில் மக்கள் மாவீரர்தினத்தை விளக்கேற்றி அனுஸ்டித்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் படையினர் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டிருந்த போதிலும், மாவீரர் நாள் தொடர்பான சுவாரொட்டிகள் ஒட்டப்பட்டு, சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைதான போதிலும் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாயன் கலண்டரும் உலக அழிவும்
மாயன் நாள்காட்டி 21.12.2012 ஆம் திகதி காலை 11:11 மணியளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று செய்திகள் வேகமாக பரவி வந்ததோடு, இலங்கையில் பல பாகங்களில் அதிசயிக்கத்தக்க சில இயற்கைக்கு மாறான செயற்பாடுகளும் நிகழ்ந்தன.

மேலும், 2012ம் ஆண்டில் நாட்டில் பல கைதுகளும், கொலைகளும், ஆலயங்களிலும் வீடுகளிலும் கொள்ளைகளும், பல அரசியல் கட்சிகள் பிரச்சினைகளும், தீர்க்கப்படாத அரசியல் செயற்பாடுகளும், பல்வேறான ஆர்ப்பாட்டங்களும், சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்தவர்கள், நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் என இன்னும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

மேலும் 2012ம் ஆண்டு பதியப்பட்ட செய்திகள் அனைத்தையும், திகதி, மாத ரீதியாக பார்வையிட CLICK HERE

பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 12:48.40 PM ]

இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், அரசாங்கத்திற்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

[ Friday, 24-05-2013, 12:30.12 PM ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.
[ Friday, 24-05-2013, 12:14.11 PM ]
கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
[ Friday, 24-05-2013, 12:08.25 PM ]
தங்காலை வீடொன்றில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தில் ஒரு வயதும் நான்கு மாதமுமான குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
[ Friday, 24-05-2013, 12:05.07 PM ]

வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.

[ Friday, 24-05-2013 06:31:17 GMT ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Friday, 24-05-2013 05:20:54 GMT ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன.
[ Friday, 24-05-2013 09:08:07 GMT ]
சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில், பல நாட்டு சர்வாதிகாரர்கள் அந்தந்த நாட்டின் வருமானத்தை தனது பெயரில் முதலீடு செய்து முடக்கியுள்ளனர்.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 11:13:27 GMT ]
உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன்ஜங்கா. கடந்த திங்கட்கிழமை 8,586 மீ உயரமுடைய இந்த சிகரத்துக்கு ஒரு மழையேற்ற குழுவினர் சென்றனர்.
Advertisements
[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.