கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டால் தனது கணவனை இழந்த சுந்தர்ராஜன் அருள்வதனா நீதி கோரி தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் 36ஆவது கூட்டத்தொடரிலும் ஈழப் பெண்ணான சுந்தர்ராஜன் அருள்வதனா கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் “தற்போது உங்களுடைய நிலைப்பாடு என்ன? நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றதா?” போன்ற வினாக்களுக்கு வதனா பதிலளித்துள்ளார்.