செய்தி
செய்தி
புலிகளின் கப்பல், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது
[ சனிக்கிழமை, 26 டிசெம்பர் 2009, 04:22.57 PM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள, “பிரின்ஸஸ் கிரிஸ்டினா” என்னும் கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலிமுகத்திடலில், இந்த கப்பல் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இந்த கப்பலுடன், இலங்கை கடற்படையின் கரையோர பாதுகாப்புக் கப்பலான சயூரா கப்பலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyright (c) 2008-09 TamilWin.com, All rights reserved.