செய்தி
செய்தி
புலிகள் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு வழிகளில் முனைப்பு: ரோஹித போகொல்லாகம
[ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, 10:51.48 AM GMT +05:30 ]
இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு வேறு வழிகளில் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் நடவடிக்கைகள் குறித்து மாலைதீவு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அஹமட் சாஹீதைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அமைச்சர்  இக்கோரிக்கையை விடுத்தார்.

குறிப்பாக இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் வைற் கொலர் (கனவான்களைப் போன்று) சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே முக்கியமான தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிகவூம் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்தும் ஆராயப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright (c) 2008-09 TamilWin.com, All rights reserved.