செய்தி
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கனடா கொண்டு வரலாம்- இலங்கை அச்சம்
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:22.48 AM GMT ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ள நாடு எது என்று தீர்மானிக்க முடியாமல் இலங்கை வெளிவிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்தத் தீர்மானத்தை அமெரிக்காகவே சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நம்பியிருந்தது.

ஆனால், அமெரிக்கா இராஜதந்திரிகள் பிளேக்கும், மரியா ஒரேரோவும் கொழும்பில் வைத்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா இதனை சமர்ப்பிக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்த மற்றொரு அறிக்கை, கனடா இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்று கூறியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமர்வில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சியில் கனடா ஈடுபட்டிருந்தது. ஆனால், அதற்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் அந்த முடிவைக் கனடா கைவிட்டிருந்தது.

எனினும், இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு கனடா இதற்குத் தலைமை தாங்கலாம் என்று அந்தத் தகவல் கூறியது. இந்தநிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் வேறொரு நாடு இந்தத் தீர்மானத்தை முன்மொழியலாம் என்றும் கருதுகின்றனர்.

அமெரிக்கா அல்லது கனடா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால், அவற்றின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாடுகள் காரணமாக, சில உறுப்பு நாடுகள் குழப்பமடையலாம் என்பதாலேயே வேறொரு நாட்டின் மூலம் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அது, அணிசேரா அமைப்பிலுள்ள ஆபிரிக்க நாடாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது என்று சிறிலங்கா அதிகாரிகள் கருதுகின்றனர்.

இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கலாம் என்ற பரவலான கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 12:48.51 PM ]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 12:22.48 PM ]

வெலிமடையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பஸ் ஒன்று சீத்தாஎலிய பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

[ Wednesday, 19-06-2013, 11:36.02 AM ]
கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபம் மற்றும் தேசிய கலா பவனம் என்பன, அவை அமைந்துள்ள இடங்களில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 11:19.18 AM ]
வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013, 10:08.13 AM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு, காதில் ஏற்பட்ட நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவரை வைத்தியசாலை டாக்டர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:48:27 GMT ]
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.