செய்தி
ஒலிவடிவம்:
அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!- அம்பாறையில் சம்பவம்
[ புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012, 06:49.54 AM GMT ]

அம்பாறை கல்ஒயா சந்தி பாலத்திற்கு அருகில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று அம்பாறை, பிரதான வீதியில் அமைந்துள்ள கல்ஒயா சந்தி பாலத்திற்கு அருகில், சடலமாக மீட்கப்பட்டவர் செங்கல் உற்பத்தி செய்யும் வாடியில் வேலை செய்து வந்துள்ளார் எனவும் அம்பாறை நகர் கார்மீக பிரதேசத்தச் சேர்ந்த, இரண்டு பிள்ளையின் தந்தையான தரங்க (29 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று காலை வேலைக்கு சென்றவர், இரவு 12 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் தேடிச்சென்ற போது பொல்லால் தாக்கப்பட்ட காயத்துடன் செங்கல் உற்பத்தி செய்யும் வாடிக்கு செல்லும் பாதையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அம்பாறை பொலிசார் தெரிவித்தனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 07:28.30 AM ]
திருகோணமலையில் இருந்து சிறிலங்காவுக்கு எதிராக இலத்திரனியல் போரை நடத்தத் திட்டமிடுவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
[ Sunday, 26-05-2013, 07:06.18 AM ]
தமிழர்களை அழிப்பதில் இனவாதக்கட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மும்முரமாக உள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
[ Sunday, 26-05-2013, 06:45.06 AM ]
பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
[ Sunday, 26-05-2013, 06:17.29 AM ]
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார்.
[ Sunday, 26-05-2013, 06:07.03 AM ]
கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 26-05-2013 05:36:28 GMT ]
மியான்மரில் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கின் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
[ Sunday, 26-05-2013 04:53:49 GMT ]
திருமண விழாவில் மின்சாரம் தடைபட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Sunday, 26-05-2013 05:45:57 GMT ]
ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
[ Sunday, 26-05-2013 06:44:57 GMT ]
தற்போது தமிழ் திரை உலகின் தலையாய பிரச்சினை கதாநாயகி தெரிவு தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 26-05-2013 04:57:11 ]
1983ம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான 26 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஐந்து கட்டப் போர்களை எதிர்கொண்டனா்.