இந்த பணி பகிஷ்கரிப்பை இன்று முதல் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க இணைத் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்தார்.
தங்களது சம்பள உயர்வு கோரிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் புறந்தள்ளி வரும் நிலையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 23ஆம் திகதிக்குள் சிறந்த தீர்வு ஒன்றை அரசாங்கம் வழங்காவிட்டால், தொடர்ந்து பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க இணைத் தலைவர் ஆர்.எம்.சந்திரபால குறிப்பிட்டார்