செய்தி
ஐ.நா. தீர்மானம் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சிறந்த நடவடிக்கை!– ராதிகா சிற்சபைஈசன் பா.உ.
[ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 03:18.21 PM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இலங்கைத் தீவில் நீதியை நிலைநாட்டுவதற்கான முதற்படி என்று கனடியப் பராளுமன்ற உறுப்பினர் செல்வி. ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி கருத்தை மேற்படி கட்சியின் மனிதவுரிமைகளிற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிவகாரங்களிற்குப் பொறுப்பான உறுப்பினருடன் இணைந்து தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகாரங்களிற்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் லவடிர் கருத்துத் தெரிவிக்கையில் தங்களது கட்சி நீணட காலமாக இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகள் கவனத்திலெடுத்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேற்படி கட்சியின் மனிதவுரிமை விவகாரங்களிற்கான பாராளுமன்ற உறுப்பினர் வெய்ன் மார்சன் கருத்துத் தெரிவிக்கையில் இந்த ஆரம்ப முயற்சி இலங்கையில் நீண்டு நிலைக்கும் ஒரு நிரந்தர சமாதான சூழலிற்கு வழிவகுக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த ராதிகா சிற்சபைஈசன் உலகின் பார்வை தற்போது இலங்கையில் நிலை கொண்டுள்ள இத் தருணத்தைப் பயன்படுத்தி நாங்கள் அனைவருமே மரியாதையுடன் வாழக்கூடிய ஒரு தீர்வுக்கு வழி செய்ய வேண்டுமென்றும் இந்தப் போரில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 07:20.41 AM ]

13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை ஜெனிவாவோ, ஜெயலலிதாவோ அல்லது வைகோ.வோ தீர்மானிக்க முடியாது. இந்த நாட்டு மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்று இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

[ Tuesday, 18-06-2013, 06:59.02 AM ]
2005ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு உச்ச நீதிமன்றம் 17.06.2013 அன்று தீர்ப்பளித்தது.
[ Tuesday, 18-06-2013, 06:43.56 AM ]
'மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக இடம்பெற்று வந்த ஆலய விக்கிரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை,என மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
[ Tuesday, 18-06-2013, 05:54.24 AM ]
புலனாய்வுப் பிரிவு அல்லது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு என்ற போர்வையில் மக்களிடம் கப்பம் கோரி வரும் கும்பல் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 18-06-2013, 05:39.50 AM ]
கம்பஹாவில் அரை நிர்வாணமாக பொது இடத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 06:45:57 GMT ]
உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது.
[ Tuesday, 18-06-2013 07:26:07 GMT ]
ராகுல் காந்தி பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் என தெரிவித்துள்ளார் மன்மோகன் சிங்.
[ Tuesday, 18-06-2013 04:17:49 GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Tuesday, 18-06-2013 07:10:25 GMT ]
எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் புன்னகை இளவரசி சினேகா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.