செய்தி
ஒலிவடிவம்:
அரசுக்கு ஆசி வேண்டி மணியோசை எழுப்புமாறு விடுத்த அரசின் உத்தரவை புறக்கணித்த யாழ்.மக்கள்!
[ புதன்கிழமை, 14 மார்ச் 2012, 03:51.31 AM GMT ] [ உதயன் ]
நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி ஆலய மணிகளை ஒலிக்கச் செய்யுமாறு அரசு விடுத்த வேண்டுகோளை யாழ். மக்கள் புறக்கணித்துள்ளனர். எனினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் படையினரின் வற்புறுத்தலின் பேரில் விசேட பூசைகளும், மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் நடைபெற்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி நேற்று சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணித்திருந்தது.

ஆயினும் அரசின் இந்தக் கட்டளையைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பு மக்களை கோரியிருந்தது. மக்களினதும், மாவீரர்களினதும் நினைவாக மணி ஒலி எழுப்பத் தடை போட்ட அரசுக்கு ஆசீர்வாதம் வேண்டி மணி ஒலி எழுப்புமாறு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கூட்டமைப்பு கேட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ் மக்கள் அரசின் கோரிக்கையை உதாசீனம் செய்து ஆலயங்களில் மணி ஒலியை எழுப்பவில்லை. குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு ஆலயத்திலும் குறித்த நேரத்தில் மணி ஓசை எழுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் படைத்தரப்பின் நிர்ப்பந்தத்தின் பேரில் யாழ். மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய பகுதிகளில் பின்னர் மணி ஓசை எழுப்பப்பட்டது. அத்துடன் விசேட பூஜைகளும் வற்புறுத்தலின் பேரில் இடம்பெற்றன.

கிளிநொச்சி, துணுக்காய், நெடுங்கேணி போன்ற பகுதிகளில் இத்தகைய பலவந்தப்படுத்தப்பட்டு மணி ஒசை எழுப்பப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகளும் மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் இடம்பெற்றது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013, 02:43.42 PM ]

திருகோணமலை- கிண்ணியா பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின்   வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Saturday, 25-05-2013, 02:35.10 PM ]
பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து எதுவும் n;தரியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
[ Saturday, 25-05-2013 13:58:45 GMT ]
சீனாவில் புயல் மழை காரணமாக 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 13:17:03 GMT ]
சர்ச்சை நாயகன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டினுள் பொலிசார் போல நடித்து நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.