செய்தி
வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் மதிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 10:28.52 AM GMT ] [ புதினப்பலகை ]
அமெரிக்க டொலருக்கு எதிரான  இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று செவ்வாய்க்கிழமை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வரும் மே மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் வழங்குவதில்லை என  இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

இதன்காரணமாக இலங்கை  ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை முதலீட்டாளர்கள் டொலரை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.

இதனால், நேற்று மாலை, 131.35 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று காலை 132.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதிவாகியுள்ள இலங்கை நாணயத்தின் ஆகக் குறைந்த மதிப்பு இதுவேயாகும்.

ஏற்கனவே, கடந்த மார்ச் 19ம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை நாணய மதிப்பு 131.60 ரூபாவாக வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன்பின்னர், சற்று நாணய மதிப்பு வீழ்ச்சி தடுக்கப்பட்ட போதும், கடந்த இருவாரங்களாக மீண்டும் வீழ்ச்சி கண்டுவருகிறது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 04:43.40 AM ]
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 04:16.26 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
[ Wednesday, 19-06-2013, 03:11.54 AM ]
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013, 02:58.49 AM ]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

[ Wednesday, 19-06-2013, 02:51.32 AM ]

வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013 04:48:54 GMT ]
பாகிஸ்தானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் புனிதப் போர் ஆகாது என லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தை நிறுவிய ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 04:32:53 GMT ]
வட மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 03:42:01 GMT ]
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 04:04:47 GMT ]
தன்னுடன் பணியாற்றிய நாயகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார் ஹன்சிகா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.