செய்தி
(2ம் இணைப்பு)
 
யாழ்.வடமராட்சியில் பட்டப்பகலில் ஒருவர் அடித்துக்கொலை இனந்தெரியாதவர்கள் அட்டகாசம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 09:51.39 AM GMT ]
யாழ்.வடமராட்சிப் பகுதியில் பட்டப்பகலில் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் இளைஞர் ஒருவர் இனத் தெரியாதவர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இச்சம்பமவ் இன்று மதியம் 1.30 மணியளவில் வடமராட்சி வதிரிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்களில் வந்த இனம் தெரியாதவர்களே இவ்விளைஞரை அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது உடைமைகள் யாவும் வீதியில் சிதறிக்கிடப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரது சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் எவையும் உடனடியாக எமக்கு கிடைக்கப்பெறவில்லை

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வடமராட்சியில் தற்போதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

வடமராட்சியில் அடித்துக்கொலை செய்யப்பட்டவர் தொண்டமானாற்றுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் என அடையாளங் காணப்பட்டதோடு இச்சம்பம் இராணுவ காவலரணுக்கு அருகிலும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று மதியம் வதிரிச் சந்தியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டபோதே இது தெரியவந்துள்ளது.

தொண்டமனாறு கோவில் வீதியைச் சேர்ந்த சிவஞானம் சிவறூபன் (வயது 28)  என்றவரே இச்சம்பவத்தில் இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரை கறுப்பு நிறமோட்டார் சைக்களில் வந்த முகமூடியணிந்த இருவர்கொண்ட குழுவினரே வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து 50 மீற்றர் பகுதியில் இராணுவக் காவலரண் ஒன்றும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 06:19.39 AM ]
‘கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜனாதிபதியவர்கள் இந்தியாவுக்குச் சென்று வீடிழந்து பாதிக்கப்பட்டுப் போயுள்ள மக்களுக்கு உறைவிடங்களை அமைத்துத் தர உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
[ Friday, 24-05-2013, 05:34.28 AM ]
அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை சாப்பிட்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013, 05:16.24 AM ]
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 03:59.52 AM ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.
[ Friday, 24-05-2013, 03:39.39 AM ]

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Friday, 24-05-2013 05:44:12 GMT ]
சூதாட்டம் விளையாட்டு உலகத்திற்கே கெட்டப் பெயரை தந்துள்ளது என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 05:08:13 GMT ]
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 05:53:43 GMT ]
இணைய தேடுபொறிகளில் முதன்மை வகிக்கும் கூகுள் நிறுவனமானது கடந்த வருடம் Voice Search வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது.
[ Friday, 24-05-2013 06:09:35 GMT ]
சமீபத்திய பரபரப்பு நடிகையான ஸ்ருதிஹாசன், தற்போது பிரபுதேவா இயக்கிவரும் ராமையா வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வருகிறார்.  
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.