செய்தி
ஆளுநர் சந்திரசிறியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் அத்துமீறி குடியேறும் சிங்கள குடும்பங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 02:10.50 PM GMT ]
முல்லைத்தீவு கொக்கிளாயில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் ஏற்பாட்டில், எதிர்வரும் 26ஆம் திகதி மேலும் 110 வரையான சிங்கள குடும்பங்கள் தமிழர் நிலங்களில் குடியேற்றப்படவுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று குறித்த பகுதிக்குச் சென்றிருந்த ஆளுநரிடம் சிங்கள மக்கள் தமக்கான காணி மற்றும் வீடுகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதற்கமைய, அத்துமீறி தமிழர் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மீனவக் குடும்பங்களை அந்தப் பகுதிகளிலேயே நிரந்தரமாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, ஏற்கனவே சுமார் 87 வரையான குடும்பங்கள் நிரந்தர பதிவுகள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான இதர வசதிகளுடன் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் தமிழர் நிலங்களில் குடியேற்றப்படவுள்ளனர். இதற்கென சுமார் 100 ஏக்கர் வரையான நிலம் அபகரிக்கப்படவுள்ளது.

இதற்காக தமிழர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் ஆளுநர் சிங்கள மக்களிடம் தெரிவித்திருக்கின்றார். மேலும் இந்த விஜயத்தின்போது எந்த விதமான அறிவித்தல்களையும் வழங்காமல் ஆளுநர் திடீரென சென்றிருந்தார்.

இதேவேளை இந்தப் பகுதியில் ஏற்கனவே தமிழருக்குச் சொந்தமான சுமார் 1500 ஏக்கர் நிலம் சிங்களவர்களால் இராணுவத்தினரின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013, 02:43.42 PM ]

திருகோணமலை- கிண்ணியா பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின்   வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Saturday, 25-05-2013 13:58:45 GMT ]
சீனாவில் புயல் மழை காரணமாக 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 13:17:03 GMT ]
சர்ச்சை நாயகன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டினுள் பொலிசார் போல நடித்து நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.