செய்தி
 Photo
தண்ணீருக்கு ஏங்கும் தட்டுவன் கொட்டி கிராமம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 02:30.13 AM GMT ]
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் இருக்கின்ற பின்தங்கிய கிராமங்களில் ஒன்று தட்டுவன்கொட்டி. தமிழர் பிரதேசங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் தம் வாழ்வைத் தொலைத்து இன்று ஏங்கும் கிராமங்களில் தட்டுவன்கொட்டி கிராமமும் அடங்கும்.

பெரும்பாலும் கடற்றொழிலில் ஈடுபடும் குடும்பங்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 98வரையான குடும்பங்கள் வாழ்ந்துவருகின்ற இக்கிராமத்தில், நீர் பிரச்சினை தற்போது இந்த மக்களுக்கு இடர் தருவதாக காணப்படுகின்றது.

இப்பிரச்சினை தொடர்பாக கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உப தலைவர் நகுலேஸ்வரன், உறுப்பினர் பொன்னம்பலநாதன் இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனும் மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

தற்போது குறைந்த அளவு நீர்த்தாங்கிகள் இருந்தபோதும், கண்டாவளையின் குடிநீர் பற்றாக்குறையுள்ள பல கிராமங்களுக்கு கரைச்சி பிரதேசசபை, நீர் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் தட்டுவன்கொட்டி போன்ற கிராமங்களின் தண்ணீர் தேவை பூரணப்படுத்தப்படாத நிலையாகவே காணப்படுகின்றது.

இக்கிராமத்தின் நீர் பிரச்சினை கருத்திலெடுத்துள்ள பிதேசசபை உறுப்பினர்கள் விரையில் தீர்வளிப்பதாக உறுதியளித்தனர்.

அக்கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது, போருக்குமுன் விடுதலைப்புலிகளால் தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு இயக்கச்சியில் இருந்து குழாய்மூலம் சிறந்த முறையில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டதாகவும் அந்த திட்டத்தின் அடிப்படையில் நீர் விநியோகம் மேற்கொண்டால் கிராமத்தின் நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என குறிப்பிட்டனர்.

இதே வேளை தட்டுவன்கொட்டிக்குளம் இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக பயன்தர முடியாதபடி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வி நிலையை பொறுத்தவரை தட்டுவன்கொட்டி பாடசாலை மாணவர்களுக்கு கணித விஞ்ஞான பாடத்திற்கு ஆசிரிய பற்றாக்குறை நிலவுவதாக அறியமுடிந்தது. தட்டுவன்கொட்டிகிராமத்தின் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் அதிகம் என்பது அந்த மக்களின் முகங்கள் உணர்த்தியது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 04:14.48 AM ]
வடமாகாணத்துக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்ற போதிலும் அதிகுறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 03:56.03 AM ]
"தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
[ Wednesday, 22-05-2013, 03:53.43 AM ]
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்பிக்கலை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஐயவீர தெரிவித்தார்.
[ Wednesday, 22-05-2013, 03:34.29 AM ]
ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
[ Wednesday, 22-05-2013, 03:05.35 AM ]

தண்ணீர் என நினைத்து போத்தலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்த ஒரு வயதேயான சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Wednesday, 22-05-2013 02:17:22 GMT ]
வீதியில் சென்று கொண்டிருந்த மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட துணை நடிகர் கைது செய்யப்பட்டார்.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 02:52:32 GMT ]
இணையப்பாவனையில் உலாவிகளின் பங்கு அளப்பரியதாகும். இவ்வாறான உலாவிகளில் முன்னணியில் திகழும் உலாவிகளுள் ஒன்றான Opera தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சாதனங்களுக்காக Opera Webkit எனும் பெயரில் அறிமுகமாகவிருக்கின்றது.
[ Wednesday, 22-05-2013 02:47:31 GMT ]
நயன்தாராவுடன் காதல், தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டவர் சிம்பு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.