இன்று காலை யாழ்.சென்ற ரணில், பூநகரி பகுதிக்குச் சென்று நல்லூர், நாகதேவன்துறை, போன்ற பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களை செய்தார். இதன்போது தண்ணீர் பிரச்சினை, வைத்தியத்தேவை போன்றன குறித்து பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு அந்த விடயங்கள் குறித்து தான் பாராளுமன்றில் அரசிடம் கேள்வியெழுப்புவதாக தெரிவித்திருந்தார். மேலும் கிளிநொச்சி நகருக்குச் சென்றிருந்த ரணில் பேருந்து நிலையத்தில் மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போதும் மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட ரணில் காணாமல்போனோர் குறித்தும் கேள்வியெழுப்பினார், எனினும் அதற்கு மக்கள் பதிலளிக்கவில்லை, இதனையடுத்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன் பின்னர் கிளிநொச்சி நகரிலுள்ள கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றிருந்த பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டுவிட்டு யாழ்.வந்த ரணில் நாளை தீவுப்பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாகவும் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இன்றைய விஜயத்தின்போது, மே தினத்தின் அவசியம் குறித்தும், அதில் சகல வேற்றுமைகளையும் மறந்த நிலையில், நியாயத்திற்காக ஒன்றுபடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.



