இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை, இலங்கை அரசு தாக்குவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 20-ம் தேதி மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள மசூதியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் மற்றும் சிங்கள காடையர்கள் முற்றுகையிட்டு ஆயுதங்களால் இடித்துள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்த உள்ளது.
இந்தப் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று வைகோ கூறியுள்ளார்.