நாட்டில் தொடர்ந்தும் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்றும் மடு அன்னையிடம் வேண்டுதல் முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா விடுதலையான பின்னர் இன்று முற்பகல் முதல்முறையாக மன்னார் மடுத் தேவாலயத்திற்கான விசேட விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவரது மனைவி அனோமா பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்கனான அர்ஜுண ரனதுங்க, ஜயந்த கெட்டகொட உட்பட 50 ற்கும் மேற்பட்டோர் அவருடன் வருகை தந்திருந்தனர்.
அநத குழுவினர் மடு திருத்தலத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டு மடு அன்னையை தரிசித்து வேண்டுதல் நிறைவேற்றியதோடு இவர்களுக்காக இடம்பெற்ற சிறப்புத் திருப்பலியிலும் கலந்து கொண்டனர்.
இறுதியாக மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளையை சந்தித்து உரையாடியதோடு மடுத் திருத்தலத்திற்கு சரத் பொன்சேகாவினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
