செய்தி
 Photo
சரத் பொன்சேகா மடுத் திருத்தலத்தில் விசேட வழிபாடு!
[ புதன்கிழமை, 13 யூன் 2012, 12:22.34 PM GMT ]
தனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் மடு திருத்தலத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்..

நாட்டில் தொடர்ந்தும் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்றும் மடு அன்னையிடம் வேண்டுதல் முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா விடுதலையான பின்னர் இன்று முற்பகல் முதல்முறையாக மன்னார் மடுத் தேவாலயத்திற்கான விசேட விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவரது மனைவி அனோமா பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்கனான அர்ஜுண ரனதுங்க, ஜயந்த கெட்டகொட உட்பட 50 ற்கும் மேற்பட்டோர் அவருடன் வருகை தந்திருந்தனர்.

அநத குழுவினர் மடு திருத்தலத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டு மடு அன்னையை தரிசித்து வேண்டுதல் நிறைவேற்றியதோடு இவர்களுக்காக இடம்பெற்ற சிறப்புத் திருப்பலியிலும் கலந்து கொண்டனர்.

இறுதியாக மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளையை சந்தித்து உரையாடியதோடு மடுத் திருத்தலத்திற்கு சரத் பொன்சேகாவினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 11:36.02 AM ]
கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபம் மற்றும் தேசிய கலா பவனம் என்பன, அவை அமைந்துள்ள இடங்களில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 11:19.18 AM ]
வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013, 10:08.13 AM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு, காதில் ஏற்பட்ட நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவரை வைத்தியசாலை டாக்டர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 19-06-2013, 10:08.06 AM ]
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன.
[ Wednesday, 19-06-2013, 09:30.22 AM ]
தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது.
[ Wednesday, 19-06-2013 10:48:27 GMT ]
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.