2013ம் ஆண்டில் பரீட்சை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பரீட்சை மோசடிகள் n;தாடர்பிலான குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட அரச அச்சக அதிகாரிக்கு வாழ்நாள் பரீட்சைத் தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் கடந்த காலங்களில் பரீட்சைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை ரத்து செய்வது குறித்து சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பாட வினாத்தாள் கசிந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.