செய்தி
யாழ். பல்கலை. கலைப்பீட வகுப்புகள் 14ம் திகதி ஆரம்பிப்பதாக தீர்மானம்! பங்குபெறப் போவதில்லை என மாணவர்கள் முடிவு
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 08:43.32 AM GMT ]
எதிர்வரும் ஜனவரி 14ம் திகதி ஆரம்பமாகவுள்ள யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கற்கைச் செயற்பாடுகளில் பங்குபற்றப் போவதில்லை என்று கலைப்பீட மாணவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களை விடுதலை செய்யும் வரை கற்கைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்று தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களும் கடந்த நவம்பர் 29ம் திகதி முதல் வகுப்புக்களைப் பகிஷ்கரித்து வந்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தை மீள இயக்கும் முயற்சியில் படைத்தரப்பின் பின்னணியோடு பல்கலைக்கழக நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துப் பீடாதிபதிகளை அழைத்த துணைவேந்தர் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதன் மூலமே அவர்களது விடுதலையை விரைவுபடுத்த முடியும் என்று துணைவேந்தர் பீடாதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் இன்று காலையில் கலைப்பீட மாணவர்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது தொடங்கப்படுவது குறித்து தர்க்கங்கள் பல இடம்பெற்றன.

இறுதியில் ஜனவரி 14ம் திகதி வரை நிலைமைகளை அவதானித்து அதன் பின் ஆரம்பிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மருத்துவ பீடாதிபதியின் முயற்சியினால் மருத்துவ பீட மாணவர்களுக்கான விரிவுரைகள் கடந்த வாரம் முதல் மீள ஆரம்பித்துள்ளன.

தற்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும், மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவித்த பின்னரே கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்ற போதிலும்,

வணிக முகாமைத்துவ பீடம் மற்றும் விவசாய பீடம் ஆகியன விரிவுரைகளைத் தொடங்க வேண்டும் என்பதில் முனைப்புக்காட்டி வருகின்றன


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 10:17.51 PM ]
’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 09:14.25 PM ]
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
[ Friday, 24-05-2013, 05:58.20 PM ]

முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

[ Friday, 24-05-2013, 05:55.17 PM ]
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடபகுதியின் மனிதாபிமான உதவிக்கான தேவைகள் குறித்து ஐநாவின் முக்கிய அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இன்று கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.
[ Friday, 24-05-2013, 03:31.36 PM ]
கடந்த 18ம் நாள் காலி முகத்திடலில் நடைபெற்ற போர் வெற்றி விழா அணிவகுப்பின் போது, சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படைத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 19:34:02 GMT ]
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
[ Friday, 24-05-2013 10:45:18 GMT ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[ Friday, 24-05-2013 19:54:44 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.