செய்தி
பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது! அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:59.42 AM GMT ]
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு நடாத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அமர்வுகளின் மூலமே 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கு தயார் எனவும், எனினும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளின் மூலமாக எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேசுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கி வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 10:04.53 AM ]
சிறீலங்கா அணிக்கு எதிரான பிரித்தானிய மக்களின் போராட்டம் நேரலையாக இன்று காலை10 மணி முதல் நடைபெற்று வருகின்று.
[ Thursday, 20-06-2013, 08:45.24 AM ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:39.04 AM ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:18.00 AM ]
பிரித்தானியாவிலிருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடந்த மாதம் கடத்திச் சென்ற தலைமை ஆசிரியை உட்பட்ட 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[ Thursday, 20-06-2013, 07:56.55 AM ]
13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழர்கள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013 07:11:02 GMT ]
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
[ Thursday, 20-06-2013 08:04:40 GMT ]
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தம்பதி களான தவராஜா, ஜலஜா ஆகியோர் கடந்த மே 25ம் திகதி சென்னை வந்த போது விமான நிலையத்திலிருந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது.
[ Thursday, 20-06-2013 10:02:04 GMT ]
இந்திய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிச்சுற்றில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Thursday, 20-06-2013 09:20:27 GMT ]
பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது.
[ Thursday, 20-06-2013 10:22:45 GMT ]
பீட்சா 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.