கனகராயன் குளம், பெரியகுளம் பிரதேசத்தில் ஏனைய குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அக்குழந்தை அங்கு புதிதாக அமைக்கவிருந்த மலசலகூடக் குழிக்குள் வீழ்ந்துள்ளது.
குழந்தையைக் காணவில்லையென உறவினர்கள் தேடிச்சென்றபோது மலசலகூடக் குழியில் குழந்தை சடலமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, சடலம் மீட்கப்பட்டது.
நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக அனைத்துப் பகுதியும் வெள்ளநீர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.