கொக்காவில் முகாம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழ் வைத்தியர் மீது தீவிர விசாரணை
அண்மையில் இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் யுவதியொருவர் கடந்த 29ம் திகதி க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதுவதற்காக லீவு பெற்று வீட்டிற்கு சென்றிருந்தார்.
பரீட்சை முடிந்த பின்னர் குறித்த யுவதி மீண்டும் படையில் இணைந்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததன் பேரில் பெற்றோர் அவரைக்கூட்டிக்கொண்டு இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர் தம்முடன் குறித்த வைத்தியரை உதவியாக இராணுவ முகாமுக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு வைத்தியர், பெற்றோரின் சார்பில் குறித்த மாணவியை விடுவிக்குமாறு இராணுவத்தினரிடம் கூறியுள்ளார்.
எனினும் அதனைப் பொருட்படுத்தாத படையினர், அவர் ஒலிப்பதிவு கருவி வைத்திருந்தார் எனவும் படையினரின் அனுமதியின்றி பெற்றோருடன் வந்தார் எனவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்து 6 மணிநேரம் படைமுகாமில் வைத்திருந்துள்ளனர்.
அதன் பின்பே மாங்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக குறித்த வைத்தியர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த வைத்தியரை விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக இலங்கை வைத்தியர் சங்கம் தெரிவித்திருக்கின்றது.
தொடர்புபட்ட செய்தி
யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த மருத்துவர் சிவசங்கர் இராணுவத்தினரால் கைது?