செய்தி
 Photo
அரசாங்கத்தினால் வழங்கிய வெள்ள நிவாரணத்தை திருப்பி அனுப்பிய குஞ்சுக்குளம் கிராம மக்கள்! கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:35.36 PM GMT ]
மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு அரசாங்கம் உரிய முறையில் நிவாரணம் வழங்காத நிலையில், த.தே.கூட்டமைப்பின் கனடா கிளையும்,கனடா மறுவாழ்வுக் கழகமும் இணைந்து அத்தியாவசிய பொருட்களை இன்று வழங்கி வைத்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்கில் பல பிரதேசங்களிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் தமிழர் தாயகப் பகுதிகளில் அரசாங்கத்தினாலும், அமைச்சர், பாரளுமன்ற உறுப்பினர்களினாலும் வழங்கப்படும் அனார்த்த உதவிகள் தமிழ் மக்களை சென்றடைவதில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையும், கனடா மறுவாழ்வுக் கழகமும் இணைந்து அத்தியாவசிய உலர் உணவுப்பெர்ருட்களை இன்று குச்சுக்குளம் மக்களிடம் கையளித்தனர்.குறித்த உலர் உணவுப் பொருட்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கைக்கான இளைஞர் அணி தலைவர் வி.எஸ்.சிவகரன் வழங்கி வைத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் லெம்பேட், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர்களான பரஞ்சோதி, எமிழ் சவுந்தர நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட குஞ்சுக்குளம் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்படைந்திருந்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்ட செயசகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவு பொருட்களில் அதிகமானவை முசலி பகுதிக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குஞ்சிக்குளம் கிராமத்திற்கு சொற்ப அளவு உலர் உணவுகளே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த உலர் உணவுப் பொருட்களை நாங்கள் பொற்றுக்கொள்ளாது திருப்பி அனுப்பி வைத்துள்ளோம்.

அவை உத்தியோக பூர்வமாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்படவுள்ளது. எனினும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை பாரிய கஸ்டத்தின் மூலம் தரை மார்க்கமாக கொண்டு வந்து தந்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 14:07:12 GMT ]
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராப், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.