வாட்டர்லு சுரேஸ் எனப்படும் 32 வயதான ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் 36 வயதான பிரதீபன் நடராஜா ஆகிய இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு தமிழ் கனேடியர்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் அண்மையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
நியூயோர்க் நீதிமன்றில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இருவருக்கும் பிணை வழங்குவது தொடர்பான கோரிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நடராஜா ஆகியோருக்கு எதிராக 2006ம் ஆண்டில் அமெரிக்க நீதிமன்றில வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாகவும், ஸ்ரீஸ்கந்தராஜா நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்ப மென்பொருளைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் குறித்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை எனவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.