செய்தி
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை! தமிழ்க் கனேடியர்கள் விளக்கம்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:33.40 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக இரண்டு தமிழ்க் கனேடியர்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என அமெரிக்காவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு தமிழ் கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்டர்லு சுரேஸ் எனப்படும் 32 வயதான ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் 36 வயதான பிரதீபன் நடராஜா ஆகிய இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு தமிழ் கனேடியர்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் அண்மையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

நியூயோர்க் நீதிமன்றில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இருவருக்கும் பிணை வழங்குவது தொடர்பான கோரிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நடராஜா ஆகியோருக்கு எதிராக 2006ம் ஆண்டில் அமெரிக்க நீதிமன்றில வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாகவும், ஸ்ரீஸ்கந்தராஜா நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்ப மென்பொருளைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் குறித்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை எனவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 14:07:12 GMT ]
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராப், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.