தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சில குழப்ப நிலைமைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர், தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.
2013ம் ஆண்டு முழுவதுமே தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜனவரி மாத இறுதியளவில் வட மாகாணசபைக்கான தேர்தல் தினம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாணசபையுடன் தென் மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளது.
ஜூன் மாதமளவில் ஊவா மற்றும் மத்திய மாகாணசபைகளை கலைத்து அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.
வருட இறுதியில் மேல் மாகாணசபைத் தேர்தலை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு 2013ம் ஆண்டில் அடுத்தடுத்து தேர்தல்களை நடாத்தி வெற்றியீட்டி அதன் பின்னர் 2014ம் ஆண்டில் பிரதான தேர்தல் ஒன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.