செய்தி
 Photo
யாழ். பல்கலை. நிர்வாகம் தொடர்பில் வணிகபீட மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:09.12 AM GMT ]
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:

ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள் மேற்கொண்ட அமைதிவழிப் பேரணி மீது இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அன்றைய தினமே 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட ஏனைய மாணவர்களின் கைது  மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு சில் ஊடகங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைத்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான செய்தி பிரசாரங்கள் பல்கலைக்கிழக மாணவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையால் எமது கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் விடுதலைக்காக பல்கலைக்கழக நிர்வாகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது தொடர்பான பூரண விளக்கம் அற்ற சூழ்நிலையில் சில ஊடகங்கள் தமக்குக் கிடைக்கின்ற சில் தகவல்களைக் கொண்டு அதனைத் திரிபுபடுத்தி சில பொய்யான, ஒன்றிற்கொன்று முரணான தகவல்களை வெளியிட்டு வருவதுடன், தமது ஊடக சுதந்திர வாய்ப்பை பயன்படுத்தி துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளினுடைய தகுதிகளை கேவலப்படுத்துகின்ற வகையிலே செய்திகளை வெளியிட்டு வருகின்றமையானது மாணவர்களிடையே ஊடகங்களின் நடுநிலைத்தன்மை தொடர்பான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மாணவர்களின் விடுதலை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றோம் என்ற அடிப்படையில் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளோம். குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் இற்கு இல்லாத சூழ்நிலையில்  பதில் துணைவேந்தராக கடமையாற்றிய முகாமைத்துவ பீடாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பாக வெளியாகிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதுடன் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அன்றைய தினங்களில் பதில் துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே இராணுவ மற்றும் காவல்துறையினரின் செயற்பாடுகளை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததுடன் 28ம் திகதி கைதுசெய்யப்பட்ட 3 மாணவர்களும் உடனடியாக விடுவிக்கக்கூடியதாக காணப்பட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் சரணடைதல் தொடர்பாக சில முரணான தகவல்கள் காணப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களை நிர்வாகமே கொண்டுசென்று கையளித்ததாக கூறப்படுகின்றது. பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் மாணவர்களுடைய பாதுகாப்பு கருதியும் பெற்றோர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலுமே பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றதேயொழிய  பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்பவில்லை என்பதுடன் மாணவர்களை நிர்வாகம் கையளித்ததன் காரணமாகவே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மாணவர்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேரம் பேசக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பாகவும் அவரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஒரு சில ஊடகங்கள் வேண்டுமென்றே அவருக்கு தனிப்பட்ட ரீதியில் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி மாணவர்களையும் பெற்றோரையும் குழப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்பதனை மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகளைப் பேண்வருகின்றோம் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகமானது எத்தனையோ அழுத்தங்களுக்கு மத்தியில் சரணடைந்து விடுதலை செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை  தொடர்பாகவும், தடுத்து வைத்திருக்கின்ற மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் தங்களது இயலுமைக்கு அப்பாற்பட்ட வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடும்போது அம்மாணவ பிரதிநிதிகளின் பாதுகாப்பினையும் அவர்களின் விரைவான விடுதலையையும் கருத்தில்கொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வெளியிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 07:37.19 AM ]
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 07:13.01 AM ]
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் மீண்டும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 06:54.10 AM ]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சைனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 06:31.12 AM ]

கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 19-06-2013, 06:30.55 AM ]
இலங்கை விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பின் வசமுள்ள திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு அமெரிக்க நிலையமொன்றை அமைத்திருக்கிறது. இது திருகோணமலை துறைமுகத்துக்கும் ஆபத்தான விடயமாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013 07:50:41 GMT ]
உலகின் முதல் விண்வெளி வீரரான யூரி காகரின் எப்படி பலியானார் என்பது குறித்து 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெரியவந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 05:15:54 GMT ]
திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் உறவு வைத்து கொண்டால் சட்டப்படி அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 06:25:26 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 08:01:12 GMT ]
இந்தியாவில் முதன் முறையாக நேற்று தொடங்கிய சீன திரைப்பட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.