செய்தி
 Photo
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 வது பேராளர் மாநாடு! 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 03:42.59 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 வது பேராளர் மாநாடு இன்று தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மண்டபத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

25 மாவட்டங்களிலும் இருந்த கட்சியின் போராளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட மாநாடு முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகி  மாலை 07.00 மணிக்கு நிறைவுபெறறது.

காலை அரங்கில் கட்சியின் செயலாளர் ஹசன் அலி எனது கட்சியின் அறிக்கையை நாம் பார்க்கவேண்டுமானால் ஜேம்ஸ் பொன்ட் பாணியில் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்றதாகும், 166 பக்கமாகும்.

இதில், அரசில் ஏற்படுத்திய பேச்சுவார்த்தை, 3 தேர்தல்கள் மற்றும் அரசின் ஏமாற்றம் மற்றும் அமைச்சர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை பேச்சுவார்த்தை போன்ற பல நிகழ்வுகள் அடங்கியுள்ளன.

இதனை இறுவெட்டு வடிவில் தயாரித்து வழங்குவதாக தெரிவித்தார்.

பொருளாளர் தவிசாளர்களது உரைகளும் இடம்பெற்றன. பிற்பகல் அரங்கில் மர்ஹும் மசுர் சின்னலெப்பை அரங்காக நடைபெற்றது.

கட்சித் தொண்டர்கள் தமது உள்ளக் குமுறல்களையும் எமது கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் திட்டமிட்டு அரசு மற்றும் அரசில் உள்ள ஏனைய அமைச்சர்கள் அரச அதிகாரிகள் செய்து வரும் தீங்குகளையும் பழிவாங்கல்களையும் தெரிவித்தனர்.

பதுளை, குருநாகல், கண்டி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, கம்பஹா போன்ற பிரதேச தொண்டர்களும் அரசு ஏனைய கட்சிகள் மற்றும் நாட்டின் இனத்துவேசம் பற்றி கூறினார்கள்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை போன்ற மாவட்ட் அபிவிருத்தித் திட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழக்கு முதலமைச்சரினால் பழிவாங்கப்படும் விதம், அக்கரைப்பற்று சவுதி வீடமைப்புத் திட்டம், மன்னாரில் நிலவும் வெள்ளப்பெருக்கு, அட்டாளைச்சேனையில் திட்டமிட்டு தேசிய காங்கிரஸ் பட்டதாரிகளுக்கு மட்டுமே நியமனம். போன்ற விடயங்களும் பேசப்பட்டன.

கட்சித் தலைவர் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றயும் விமர்சனங்களையும் நேருக்கு நேர் கட்சித் தொண்டர்கள் விமர்சித்தனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலமாக தலைவர் ஹக்கீம் உரையாற்றினார்.

அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததாவது:

அடுத்த மாதம் நிறைவேற்றப்படுகின்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மற்றும் சட்ட திட்டங்களுக்கு கட்சி ஆதரிப்பதா இல்லையா என்று அடுத்த தினம் கூடும் உயர் பீட உறுப்பினர் கூட்டத்தின் போது 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு செயற்படுவது எனத் தீர்மானம் எடுக்கப்படும்.

கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு இன்னும் 2 வருடங்கள் பொறுத்திருங்கள். அந்த முதலமைச்சரால் குச்சவெளி பிரதேசத்தின் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களை ஒன்றும் செய்ய முடியாது.

முதலமைச்சர் ஆசனத்தில் அவரை அமர்த்தும்போது அவர் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமர்த்தவில்லை. அவர் எம்மோடு சேர்ந்து செயலாற்றுவார் என்றுதான் என்ணியிருந்தோம். எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசோடு சில விட்டுக்கொடுப்போடு தான் நாம் சோரம் போனோம். ஆனால் இங்கு கட்சித் தொண்டர்களது உள்ளக் குமுறல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து அரசில் இருப்பதா இல்லையா ? என்பதை அடுத்த மாதத்தில் உயாபீடம் தீர்மானம் எடுக்க வேண்டும்.

8 தீர்மானங்கள் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 10:01.20 PM ]
இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின் சாராம்சத்தை குறைக்க திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 09:29.47 PM ]
எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாக, தமிழீழ விடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவு, தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது.
[ Wednesday, 19-06-2013, 08:55.15 PM ]
அமைதி வழியில் "சிறிலங்காவைப் புறக்கணிப்போம்" என்று ஓவல் மைதானத்தின் முன் நின்று போராடிய எம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவிற்குள் தலைவிரித்தாடிய அரச பயங்கரவாத வேர்கள் எல்லை கடந்து பிறநாடுகளிலும் தமிழ் மக்களைக் குறி வைப்பது அம்பலமாகின்றது.
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.