செய்தி
ஆயுர்வேத வைத்தியர் வீட்டில் ஆயுத முனையில் துணிகர கொள்ளை! யாழ். நவாலியில் சம்பவம்!
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 09:19.46 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் 19 பவுண் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபா பணம் என்பன ஆயுதமுனையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரினால் அபகரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை 6. 15 மணியளவில் நவாலி கிழக்கு பிரசாத் வீதியிலுள்ள சந்தைக்கு முன்பாக உள்ள ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

லியோன் புஸ்பராணி என்ற ஆயுர்வேத பெண் வைத்தியரின் வீட்டிலே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஆயுர்வேத வைத்தியசாலை வெள்ளிக்கிழமைகளில் வழமையாக திறப்பது இல்லை. இதனை அறிந்து கொண்ட இனம் தெரியாத சிலர் மாலை 5.30 மணியளவில் நேற்று முன்தினம் வைத்தியம் செய்ய வந்தோம் மிகுதிப் பணம் தரப்படவில்லை. என்று சொல்லிக்கொண்டு அவ்வீட்டினை அவதானித்ததோடு உறவினர் ஒருவருக்கு வைத்தியம் பார்க்க வரலாமா என ஆயுர்வேத வைத்தியரிடம் கேட்டுச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் மாலை 6.15 மணியளவில் இருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் வீட்டிற்கு உள்ளே வந்து அம் மருத்துவ பெண்மணியின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகைகளையும், அவரது வயதான தாயாரிடம் இருந்த நகையையும், வீட்டில் இருந்த 16 ஆயிரம் ரூபா பணத்தினையும் துணிகரமாக திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனைத் தடுக்க முற்பட்ட அவரது கணவரான ஞானம் லியோன் என்பவரையும் அத்திருடர்கள் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த மின் குமிழ்களையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரினால் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 08:29.39 AM ]

களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

[ Thursday, 23-05-2013, 08:20.47 AM ]
யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
[ Thursday, 23-05-2013, 08:11.48 AM ]

உலக மலேரியா தினமான இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் மலேரியா விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Thursday, 23-05-2013, 07:46.45 AM ]

யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் அந்தோனியார் ஆயர் இல்லம் உட்பட ஐந்து இடங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக மாற்றுவதற்கு தேசிய மரபுரிமைகள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013, 07:46.03 AM ]

சட்டவிரோதமான முறையில் சவூதி அராபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவருவதற்காக பொதுமன்னிப்பு காலத்தை நீடித்துக்கொள்ளும் பொருட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

[ Thursday, 23-05-2013 07:38:31 GMT ]
ஜப்பானைச் சேர்ந்த யுசிரோ மியுரா என்ற 80 வயது முதியவர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 06:57:07 GMT ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 08:03:07 GMT ]
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறைக்கு சென்றுள்ள ஸ்ரீசாந்த், மலையாளப் திரைப்படம் ஒன்றில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.