ஜே.வி.பியும், த.தே.கூட்டமைப்பும் கடந்த காலங்களிலும் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை எடுத்துள்ளன: பிரதி சபாநாயகர்
ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில தீர்மானங்களை நாட்டை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன.
பிரதம நீதியரசரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைகளில் ஆஜராகப் போவதில்லை என சபாநாயகர் ஏற்கனவே தீர்மானித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஜே.வி.பி.யும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகத் திட்டமிட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது சபாநாயகரின் உத்தரவினை மீறும் வகையில் அமைந்துள்ளது.
அரசியலமைப்புடன் தொடர்புடைய விடயங்களில் அரசியல் பேதம் பாராட்டுவது நியாயமானதல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் நாட்டை பிளவடையச் செய்யும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது என சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார்.