செய்தி
இலங்கையில் நாடாளுமன்றம்தான் அனைத்திலும் உயர்ந்தது என்பதை ஏற்க முடியாது!– அனுரகுமார திஸாநாயக்க
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:42.15 AM GMT ]
இலங்கையில் நாடாளுமன்ற செயல்பாடுகளே கேலிக்கூத்தாக இருக்கும் போது, நாடாளுமன்றம் தான் அனைத்திலும் உயர்ந்தது என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது எனவும், நாடாளுமன்ற வழிமுறைகள் இலங்கையில் மதிக்கப்படுவது இல்லை எனவும்  ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

பிரதம நீதியரசரைத் தேடிச் சென்று வேட்டையாடும் ஓர் அணுகுமுறையை இந்த அரசாங்கம் பின்பற்றி வருவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குற்றவியல் பிரேரணை சமர்ப்பிப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் ஜே.வி.பி. முற்று முழுதாக நிராகரிக்கின்றது.

பிரதம நீதியரசர் நீதிமன்றத்தை எதிர்நோக்காமால் அவரை பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது என்றும், பிரதம நீதியசருக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அரசாங்கத்திற்கு ஜே.வி.பி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 12:44.58 AM ]
சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமான (Shanghai International Film Festival இல் கனடா, ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், புறுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Ciné Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவு செய்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 14:07:12 GMT ]
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராப், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.