செய்தி
மூன்று தமிழ் பெண்கள் மீது காடையர்கள் பாலியல் பலாத்காரம்! திருக்கோவிலில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:34.17 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று தமிழ்ப் பெண்கள் மீது  காமவெறி பிடித்த  காடையர் கூட்டமொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த இந்த மூன்று பெண்களும் வட்டமடு பிரதேசத்தில் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நான்கு காடையர்கள் அவர்களைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.

இதன்போது அந்தக் காமுகக் கயவர்களுடன் போராடிக் கொண்டிருந்த அந்த மூன்று பெண்களும் கூக்குரலிடவே பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததனைக் கண்ணுற்ற நான்கு காமுகர்களும் தலைமறைவாகி விட்டனர்.

இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட மூன்று பெண்களும் தப்பியோடி நகருக்குள் வந்துள்ளனர்.

இருப்பினும் கயவர்களுடன் அவர்கள் போராடியதால் காயமுற்ற நிலையில் முதலில் திருக்கோவில் வைத்தியசாலையில் மூவரும் அனுமதிக்கப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 03:59.52 AM ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.
[ Friday, 24-05-2013, 03:39.39 AM ]

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:34.22 AM ]

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:33.09 AM ]

 அனுராதபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 லட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் அதன் கணக்காளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

[ Friday, 24-05-2013, 03:32.14 AM ]

டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Friday, 24-05-2013 04:28:46 GMT ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 04:15:59 GMT ]
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது வக்கீல் ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார்.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 04:55:59 GMT ]
கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் முதன் முறையாக இந்தியில் பாடியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.