செய்தி
(2ம் இணைப்பு)
 
ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை: மேன்முறையீட்டு நீதிமன்றம்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 06:38.26 AM GMT ]

ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு வலுவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசரின் மனு எதிர்வரும் 15ம் திகதி விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியுமா என உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றிடம் அரசியலமைப்பு விளக்கம் கோரியிருந்தது.

அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு விசாரணை செய்யும் தகுதி கிடையாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 07:18.25 AM ]
2009 ம் ஆண்டு ஈழத்தில் போர் முடிந்த பின்பும் தமிழர்கள் பலரும் இலங்கையில் இருந்து தப்பித்த வண்ணமே இருந்தனர். சிலர் நேரடியாக இலங்கையில் இருந்து இந்தோனேசியா சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றனர். சிலர் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்து முகாமில் தங்கி இருந்தனர்.
[ Thursday, 20-06-2013, 07:12.40 AM ]
வவுனியாவில், பாடசாலைக்குச் சென்ற மாணவனைக் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ் நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 06:39.49 AM ]
இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜ தந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இந்திய அரசின் ஏற்பாட்டில் முக்கிய பயணமொன்றை மேற்கொண்டு ஜூலை 7ம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
[ Thursday, 20-06-2013, 04:43.14 AM ]
மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்ற இலங்கை அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013, 03:02.46 AM ]
நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளான விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Thursday, 20-06-2013 04:37:56 GMT ]
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Thursday, 20-06-2013 07:26:52 GMT ]
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.