கொடிகாமம் புத்தூர்ச் சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில் மாத்தறை மாவட்டம், அக்குரஸ்ஸ பரஹவத்த பகுதியைச் சேர்ந்த வீவத்தாஹே நிஹால் (வயது 38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவர் யாழில் இடம்பெற்றுவரும் வீதி அபிவிருத்தி பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.