செய்தி
நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முறுகல் - விரைவில் நீங்கும் என்கிறார் கெஹலிய
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:21.17 PM GMT ]
பிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றம் பதிலளிக்கவுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் எட்டாம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவிப்பார். அதுவரை நாங்கள் எதுவும் கூற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பதவி விலக்குவது தொடர்பில் ஒரு முறைமை பின்பற்றப்பட்டு வந்தது. அந்த முறைமை குறித்து தற்போது புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.

சிலவேளை எட்டாம் திகதிக்கு முன்னரே பாராளுமன்றம் அவசரமாக கூடக்கூடிய சாத்தியம் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போதைய நிலைமைகளை பார்க்கும் போது நீதித்துறைக்கும் சட்டவாக்க நிறுவனமான பாராளுமன்றத்துக்கும் இடையில் ஒரு அளவில் முறுகல் நிலை உள்ளது என்பதனை என்னால் மறுக்க முடியாது. ஆனால் இது தற்காலிகமாக மற்றும் இறுதியான சிக்கல் நிலையாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 10:13.25 AM ]
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது. அத்துடன் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 10:11.50 AM ]
எந்தவொரு நாடோ இனவாதிகளோ இனியும் இலங்கை நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 09:41.53 AM ]
சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரான இலங்கையர் ஒருவர் சைப்பிரஸ் நாட்டில் கைது செய்யப்டப்டுள்ளார்.
[ Saturday, 25-05-2013, 09:23.26 AM ]
யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 25-05-2013, 08:50.24 AM ]
சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 10:19:13 GMT ]
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:50:44 GMT ]
சூதாட்ட புகாரில் கைதான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஜெய்ப்பூர் தோழிக்கு பரிசளித்து இருந்த பிளாக்பெர்ரி இசட்10 செல்போனை அப்பெண்ணிடம் இருந்து ஏற்கனவே பொலிசார் பறிமுதல் செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புக்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 07:54:51 GMT ]
கொலவெறி இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் சினிமா குறித்து கூறிய அறிவுரையால் குழப்பத்தில் காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.