செய்தி
 Photo
மட்டக்களப்பில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லங்காசிறி தமிழ்வின் இணையத்தளம் உதவி
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 04:13.03 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரி பிரிவு மக்களுக்கு தமிழ்வின் மற்றும் லங்காசிறி இணையத்தளம் ஆகியவை உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் ஊடாக வழங்கி வைத்துள்ளது.

இதனடிப்படையில் மகிழடித்தீவு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களும், மகிழடித்தீவு தெற்கு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்கும் இவ் உதவி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவிப் பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டன.

ஒரு குடும்பத்துக்கு இரண்டு பாய், ஒரு வெற்சீற், ஒரு அங்கர் பால்மா, மூன்று சவர்க்காரம் என்ற வகையில் பொருட்கள் வழங்கப்பட்டது. 250 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள் வினியோகிப்பதன் அடிப்படையில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பொருட்கள் வழங்கப்பட்டது.

இவ் உதவிகள் மகிழடித்தீவு கிராம அதிகாரி அலுவலகத்திலும், மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரி அலுவலகத்திலும் வைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோரால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் அனர்த்த சேவைகள் நிவாரணக் குழுவினர்களான கி.ரவீந்திரராசா, ந.குகதர்சன், பு.பிரணவன், த.சந்திரகுமார், ம.சூரியகுமார் மற்றும் பல பிரதிநிதிகளும், மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரியும் கலந்து கொண்டனர்.

இவ்உதவியை வழங்கிய தமிழ்வின், லங்காசிறி ஆகிய இணையத்தளங்களுக்கு மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம மக்களும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் நன்றிகளை தெரிவிக்கின்றது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 05:58.08 PM ]
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013, 04:51.14 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
[ Tuesday, 18-06-2013, 04:20.39 PM ]
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:43.41 PM ]
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:35.09 PM ]
இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்ததை அமுல்படுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டிருந்து தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.  
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Tuesday, 18-06-2013 21:06:02 GMT ]
ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு பொலிசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்ரவதை செய்வதாக டெல்லி நீதிமன்றத்தில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
[ Tuesday, 18-06-2013 13:20:08 GMT ]
செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.