ஏற்கனவே இந்தப்படகு இந்தோனேசிய கடற்படையினரால் கடந்த 23 ஆம் திகதி அவதானிக்கப்பட்ட போதும் அது வர்த்த நோக்கில் வந்த படகாக இருக்கலாம் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்படவில்லை.
எனினும் நேற்று அருகில் சென்று பார்த்தபோதே குறித்த படகு பழுதடைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அதில் இருந்த 46 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்.
இவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு செல்லும் நோக்குடன் இலங்கையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.