செய்தி
தனது கணவரை வங்கியின் தலைவராக்குமாறு பிரதம நீதியரசர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தார்: அமைச்சர் திஸ்ஸ விதாரண
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:42.23 AM GMT ]

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கொடுத்து வந்த வலியுறுத்தல் காரணமாகவே அவரின் கணவரை ஜனாதிபதி தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு பிரதம நீதியரசரை உலகில் எங்கும் பார்த்திருக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தனிப்பட்ட ரீதியில் சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக பதவிவகிக்க தகுதியற்றவர் என்றும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னரே தீர்த்திருக்க முடியும். எனினும் அரசாங்கம் அதனை உரியவகையில் நிறைவேற்றாமை காரணமாகவே இன்று இந்தப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சிராணி பண்டாரநாயக்க ஊழல்மிக்கவர் என்று தெரியாமலேயே ஜனாதிபதி அவரை பிரதம நீதியரசராக நியமித்தார் என்றும் திஸ்ஸ விதாரண குறிப்பிடடுள்ளார்.

ஜனாதிபதி தமது ஆணைக்கேற்ப செயற்படவில்லை என்பதை காரணம் காட்டி அமரிக்கா பிரித்தானியா உட்பட்ட முதலாளித்துவ நாடுகளும் இன்று ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜே.வி.பியுடன் இணைந்து இந்தவிடயத்தை பெரிதுப்படுத்துவதாக திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை 13 வது திருத்தச்சட்டத்துக்கு அமைய அதிகரங்களை பகிராவிட்டால், நாடு மீண்டும் 30 வருடங்களுக்கு பின்னோக்கிய நிலைக்கு செல்லும் என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013, 12:48.51 PM ]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 12:22.48 PM ]

வெலிமடையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பஸ் ஒன்று சீத்தாஎலிய பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

[ Wednesday, 19-06-2013, 11:36.02 AM ]
கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபம் மற்றும் தேசிய கலா பவனம் என்பன, அவை அமைந்துள்ள இடங்களில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[ Wednesday, 19-06-2013 10:48:27 GMT ]
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.