இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு உலமா சபை கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பொதுபல சேனா என்ற பௌத்த அமைப்பு, அண்மையில் இந்த ஹலால் சான்றிதழ் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. ஹலால் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக உலமா சபைக்கு வருடம் ஒன்றுக்கு 80 பில்லியன் ரூபாய்கள் கிடைக்கின்றன.
இந்த பணம் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு அனுப்பப்படுகிறது என்று பொதுபலசேனா குற்றம் சுமத்தியிருந்தது.
இந்தக்குற்றச்சாட்டு சிங்கள சமூகத்துக்கு மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் சந்தேகத்தை கொண்டு வந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள உலமா சபை, பாதுகாப்பு செயலாளர் இந்தவிடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளது.