Switch to
   
   
   
செய்தி
இந்தோனேசியாவில் உள்ள இலங்கையர்கள் அகதிகளா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 03:30.12 PM GMT +05:30 ]
இந்தோனேசிய கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள ஓசியானிக் விக்கிங் கப்பலில் இலங்கையர்கள், உண்மையில் அகதிகளா என அவுஸ்திரேலியாவின் முதலாம் செனட் உறுப்பினர் ஸ்டீவ் பீல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்தோனேசியாவில் வசித்ததாகவும், ஜகார்த்தாவின் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து அவர்கள் வீசிய கடிதம் ஒன்றில் அவர்கள் இதனை தெரிவித்திருந்ததாக நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அலெக்ஸ் என அடையாளப்படுத்திய அகதிகள் குழுவின் தலைவரை முதன் முதலில் தொடர்பு கொண்ட போது அவரின் ஆங்கிலம் சிறப்பாக இருக்கவில்லை என செனடர் பீல்டிங் தெரிவித்துள்ளார்.

எனினும் இரண்டு வாரங்களின் பின்னர், அவரது ஆங்கிலம் சிறப்பாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதிக்கும், அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ், அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலிய கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர்,அவர்களுக்கான செலவீனங்களுக்கான முரண்பாடுகள் எழுந்தததை அடுத்து அது அவுஸ்திரேலியாவில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தமது கப்பலை அகதிகள் கடத்திச் சென்றதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்த போதும், அதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பலவீனமான குடிவரவு கொள்கையை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் குறித்த அகதிகள் குழு ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே இலங்கையில் இருந்து வெளியேறி இருந்தால், அவர்கள் வசித்த பிராந்தியத்திலேயே வசிப்பதற்கு உரித்துடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய பிரதமரின் வாதம் பொய்த்துப் போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை தற்போது பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதேனும் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement