Switch to
   
   
   
செய்தி
  • Photo
அரசின் தமிழ்-சிங்கள பங்காளி கட்சிகள் மத்தியிலான முரண்பாடு பற்றி ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? : மனோ கணேசன் பா.உ. கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2009, 09:22.49 AM GMT +05:30 ]
அரசின் அரசியல்வாதிகள் மூலமாகவும், ஊடக நண்பர்கள் மூலமாகவும் அரசில் இணைவதற்கு எங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், தமது கூட்டணிக்குள் இருக்கும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி முடிவுகாணவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் பா.உ. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் பா.உ. விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகியவை ஒருபுறமாகவும், ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை இன்னொரு புறமாகவும் 13வது திருத்தம் தொடர்பில் பகிரங்கமாக முரண்பட்டு நிற்கின்றன.

அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மூலமாகவும், ஊடக நண்பர்கள் மூலமாகவும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் தமது கூட்டணிக்குள் இருக்கும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி முடிவு காண வேண்டும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் மாகாணசபைகளுக்கு மேலதிக அதிகாரங்களை கோருகின்றார்கள். இது 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாகும். இதை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இந்தியாவிற்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருந்தார். இன்று இதை ஜனாதிபதியும் மறந்துவிட்டார். இந்திய அரசாங்கமும் மறந்துவிட்டது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்லவேண்டிய தேவையை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். சரத் பொன்சேகாவின் இந்த கருத்தை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவும், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்சவும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

விமல் வீரவங்ச ஒருபடி மேலேபோய் சரத் பொன்சேகாவின் இந்நிலைப்பாடு ஜேவிபிக்கு ஏற்புடையதா என்ற மேதாவித்தமான கேள்வியையும் எழுப்பி, பொது வேட்பாளர் தொடர்பிலே முரண்பாடு எற்பட்டுள்ளதாக கூறுகின்றார்.

ஆனால் உண்மையிலேயே ஆளுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள்ளே இருக்கும் கட்சிகள் மத்தியில்தான் முரண்பாடு பகிரங்கமாக இருக்கின்றது.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு என்பது 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்லப்போகின்றதா இல்லையா என்பது பற்றி ஆளும் கூட்டணியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களுக்கு இதை தெளிவாக தெரிவிக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் நியமனத்திற்கு முன் தெரிவிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் சம்பிக்க ரணவக்கவையும், விமல் வீரவன்சவையுயும் கணக்கில் எடுக்கப்போவதில்லை. இவர்களை நாங்கள் அரசியல்வாதிகளாகவே பார்ப்பதில்லை.

ஆனால் ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்களின் வாக்குகளை கோருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு இது தொடர்பில் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.

அமைச்சாகள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், பெ.சந்திரசேகரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களான சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரது பதில்கள் தமிழ் மக்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.

இன்று போர் முடிவிற்கு வந்துவிட்டது. இனிமேலும் தேசிய இனப்பிரச்சிiயை வைத்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் அரசியல் சித்துவிளையாட்டு விளையாட முடியாது. பாம்பிற்கு வாலையும், கீரிக்கு தலையையும் காட்டி அரசியல் நடத்த முடியாது.

தெளிவான அரசியல் காரணங்கள் இல்லாமல் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழ் மக்கள் கண்களை மூடிக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு இனப்பிரச்சினைக்கான தீர்வை அறிவிப்போம் என்ற பழைய பல்லவியை நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் இனிமேலும் தயாராகவும் இல்லை.

இது இந்நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மலையகம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடாகும்.

இந்த உறுதிப்பாட்டையே நான் எதிரொலிக்கின்றேன்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்