Switch to
   
   
   
செய்தி
தேர்தலை நோக்காகக் கொண்டு இலங்கையில் பொருள் விலைகளில் குறைப்பு
[ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009, 04:03.12 PM GMT +05:30 ]
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களை கருத்திற்கொண்டு, மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் மொத்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக  அறிவிக்கப்படுகிறது.

எனினும் அரசாங்கம் இதனை சர்வதேச சந்தையின் மாற்றம் என தெரிவித்துள்ளது.

இன்றைய அறிவித்தலின்படி ஒரு கிலோ சீனியின் மொத்தவிலை 80 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் 65 ரூபாவாகவும், சின்ன வெங்காயம் 75 ரூபாவாகவும், கிழங்கு 65 ரூபாவாகவும் விற்பனை செய்ய்ப்படவுள்ளன.
 
இதுத் தவிர வெள்ளைப் பூடு 200 ரூபாவாகவும், பாஷ்மதி அரிசி 85 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் 195 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.

அதேநேரம் நாளை மறுதினம் முதல் அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலைகளிலும் குறைப்பு ஏற்படுத்தப்படவுள்ளன.
 
இலங்கையில் தேர்தல் மற்றும் சிங்கள பெருநாள் காலங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதும் பின்னர் அவை அதிகரிக்கப்படுவதும் இயல்பான விடயங்களாக இருந்து வருகின்றன.
 
இதுவரை காலமும் யுத்தவெற்றியில் நம்பிக்கை வைத்து தமது தேர்தல் வெற்றியை கணித்துக் கொண்டிருந்த அரசாங்கம் தற்போது  அது துணை போகாது என்ற அடிப்படையிலேயே மக்கள் மனதை வெல்வதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement