|
|
|
| சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்க இலங்கையுடன் ஒப்பந்தம் |
| [ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009, 03:18.28 PM GMT +05:30 ] |
சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் இலங்கை அராசங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. |
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்திற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளினால் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் கூட்டாக இணைந்து நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட கால அர்ப்பணிப்புடன் கூடிய திட்டங்களின் மூலமே சட்டவிரோத குடியேறிகளின் செயற்பாடுகளை தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வடக்கு இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியேற்றுதல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய செயற்பாடுகளை மட்டுப்படுத்தல் போன்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் போகொல்லாகம தெரிவித்துள்ளார். |
|
|
|
| Sponsor |  | | Advertisements |
| (4ம் இணைப்பு) |
| ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது |
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:45.22 PM ] [ ] |
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ] |
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்] |
| முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்! |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ] |
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ] |
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்] |
| தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ] |
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்] |
| புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ] |
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்] |
|
|