சென்னை விமான நிலையத்தில், தமது விஜயம் குறித்து கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க, தாம் இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன், எதிர்கட்சி தலைவர் லால் கிருஸ்ண அத்வானி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிருப்தியுற்ற நிலையில் அந்த அரசாங்கத்தை மாற்றும் முயற்சிக்கு புதுடில்லி நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கான உத்தியோகப் பற்றற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்தவின் அரசாங்கம், இந்தியாவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் காட்டிக்கொண்டு சீனாவிடமும் அதிக செல்வாக்கை, பெற்றுக்கொண்டதாக இந்தியா சந்தேகிக்கிறது.
எனவேதான் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. |