Switch to
   
   
   
செய்தி
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை இந்தியா விரும்புவதாக தகவல்
[ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009, 03:31.19 PM GMT +05:30 ]
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்திய காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், தமது விஜயம் குறித்து கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க, தாம் இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன், எதிர்கட்சி தலைவர் லால் கிருஸ்ண அத்வானி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிருப்தியுற்ற நிலையில் அந்த அரசாங்கத்தை மாற்றும் முயற்சிக்கு புதுடில்லி நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கான உத்தியோகப் பற்றற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்தவின் அரசாங்கம், இந்தியாவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் காட்டிக்கொண்டு சீனாவிடமும் அதிக செல்வாக்கை, பெற்றுக்கொண்டதாக இந்தியா சந்தேகிக்கிறது.

எனவேதான் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்